தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

தனுஷ் -சுருதியினால் ரஜினி கமலுக்குகிடையிலான நட்பில் விரிசல்.


எந்த பக்கம் திரும்பினாலும் பசி, முடியாமை, மூட நம்பிக்கை, ஏமாற்றம், ஏழ்மை இப்படியாக ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அழித்துக்கொண்டு இருக்கிறது இதை பற்றியோ இதை போக்க ஏதாவது விழிப்புணர்வோ அல்லது இதை தடுக்கவோ என்பதை பற்றிய பதிவுகள் எங்கேனும் தேடினால் தான் கிடைக்கிறது ஆனால் சில இருவர் சம்பந்த பட்ட அவர்களின் தனிபட்ட விடயம் அதை பற்றி எங்கு பார்த்தாலும் பதிவுகள் தனுஷ்- சுருதி காதல் இதனால் என்ன என்ன நடக்கிறது என அவரவர் கற்பனையில் ஒவ்வொரு விதமான பல பதிவுகள் இதனால் யாருக்கு என்ன பயன்?? அதிகளவு பார்வையாளர்கள் வருவார்கள் என்பதை தவிர? முன்பு பிரபுதேவா,நயன்தாரா அவர்கள் கூட அவர்கள் வாழ்கையை பற்றி அவளவு நேரம் செலவழித்து அவர்களை பற்றி சிந்தித்து இருக்க மாட்டார்கள் அவர்களுக்காக பலர் எந்த பயனும் அற்று பதிவுகளை போட்டு தங்களை தானே எமற்றிகொண்டனரே தவிர வேறு எந்த நன்மையும் ஏற்பட்டதாக  என் சிற்றறிவுக்கு படவில்லை.

மேலே நான் பதிந்த தலைப்பை பார்த்து பலர் பல  எதிர்பார்ப்புக்களோடு   வந்திருப்பீர்கள் என்று எனக்கு தெரியும் அந்த நபர்கள் எல்லாம் என்னை மன்னித்து விடுங்கள்.என்னாலும் கிளுகிளுப்பாக எழுத முடியும் ஆனால் அடுத்தவர்கள் வாழ்கையை கெடுப்பதுக்காக எழுதுவதுக்கா நானும் எழுத வேண்டும் என்று சில காலங்களுக்கு முன்பு எழுதுபவர்களை பார்த்து நானும்  ஆசை பட்டேன். பயனுள்ள நேரத்தை விரயம் செய்யும் பொது ஒன்று எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும் இல்லை பிறருக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும் எதுவும் இல்லாமல் உண்மையோ இல்லையோ என்று தெரியாத ஒரு விடயத்தை பக்கத்தில் இருந்து பார்த்ததுபோல எழுதுவது மட்டும் அல்ல ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் வாழ்க்கைக்குள் மூக்கை நுழைக்கிறீர்கள் இது சரியானதா? இப்படி எழுதி எங்கள் இணையத்தை பலர் பார்க்க வைப்பதில் என்ன ஆகிவிட போகிறது?? இதை விட மற்றவர்களை சிந்திக்கவோ சிரிக்கவோ வைக்கும் பதிவுகளை போடலாமே!!!

சமுதாயத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்க எழுத எத்தனையோ விடயங்கள் இருகின்றன. படித்தவர்கள் பாமர மக்களின் அறியாமையை வியாபாரமாக்கி பணம் சம்பாதிக்கிறார்கள். கல்வி இன்று ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருக்கிறது நல்ல கல்வியை நாடி சென்றால் அதிகளவு பணம் கேட்கிறார்கள் இல்லை என்றால் அதோடு அப்பா அம்மா படித்தவர்களா என்று கேட்டகிறார்கள் அப்படியானால் பாமரனும் ஏழையும் என்ன செய்வான்? இதை விட சில இடங்களில் சாதி கேட்கிறார்கள்,சீதனம் என்ற பெயரில் எத்தனை பெண்ணை பெற்றவர்கள் சுரண்ட படுகிறார்கள்,ஆன்மிகம் என்ற பெயரில் எத்தனை பாமரர்கள் வழிமாறி போகிறார்கள்  இப்படி ஆயிரம் ஆயிரம் பிரச்சனையில் எங்கள் சமுதாயம் மெல்ல மெல்ல அழிக்கபடுகிறது. 

தனுஷ் சுருதியை காதலிக்கா விட்டால் எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடுமா? அவர்கள் அப்படி காதலித்தாலும் அவர்களை விட கேவலமானவர்கள் அவர்கள் தனிபட்ட வாழ்கையை இப்படி கேலிசெய்து விளம்பர படுத்தி ரசிக்கும் வக்கிர குணம்.


3 comments:

  1. அழைத்து வந்து ஆப்பு அடித்து விட்டீர்களே.

    ReplyDelete
  2. அருமையான கருத்து.

    ReplyDelete