தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!
Showing posts with label பேய். Show all posts
Showing posts with label பேய். Show all posts

நாங்கள்தான் பேயாகிறோம்.............பேய்குள் நாங்கள்.



பேய் என்றால் என்ன? பேய்க்கு சக்தி இருக்கிறதா? இறந்த பின் மனிதனுக்குஆவியாகி இன்னொரு  மனிதனை ஏதாவது செய்ய முடியுமா? ஒருவரின் உடலில் புகுந்து இன்னொருவரை பழிவாங்க முடியுமா? இப்படியான நம்பிக்கை பலரது மனங்களில் ஆதிக்கம் செலுத்தி அவர்கள் வாழ்கையை திசை மாறி போய்  விடுகிறது இதில் பல பாமர மக்கள் பாதிக்க படுகிறார்கள் என்று பார்த்தால் இல்லை படித்தவர்கள் பலரும் இந்த பயத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள்..........

நண்பர்களே இறக்கின்ற ஒவ்வொடு மனிதனுக்கும் பல எதிரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் அப்படி சாகிறவர்கள் எல்லோரும் ஆவியாகி அவர்களை பழி வாங்கினால் பழி வாங்க முடிந்தால் பூமியில் யாருமே இருக்க மாட்டார்கள் எப்படி கோவில்களில் சாமி வருகிறதோ அதுபோலவே நம்பியவர்களுக்குத்தான் பேயும் பிடிக்கிறது இது உங்கள் மனதில் நடக்கும் ஒரு விந்தை இதை அறியாதவர்கள் பலர். இதுபற்றி தெளிவு படுத்த சமுதாய அக்கறை உள்ளவர்களும் முன்வருவதில்லை இந்த பயத்தை வைத்து கோவில்களிலும் பிழைப்பு நடத்துகிறார்கள். 

சரி நீங்கள் நம்புவது போல இறந்தவர்களால் ஏதாவது செய்ய முடியும், அவர்களுக்கு சக்தி இருக்கிறது, பழி வாங்கலாம் என்று வைத்து கொள்ளவோம். முள்ளி வாய்க்காலில் எத்தனை ஆயிரம் பேர் இறந்தார்கள் ????அதில் ஒருவர் கூடவா மகிந்த ராஜபக்ஷவை பிடிக்க முடியாமல் போய்விட்டது?? அவரை அழிக்க முன்வாராமல் இருந்திருப்பார்கள்?????????இப்படி உலகில் எத்தனையோ அப்பாவிகள் அழிக்க படுகிறார்கள் வலியவர்களால் அவர்கள் நல்லவர்களை விட சிறப்பாக இருக்கிறார்களே??? இயற்கை விதிக்கு அமைய எல்லா தாக்கத்துக்கும் சமமானதும் எதிரானதுமான மறு தாக்கம் அவர்களை பாதிக்கும் வரை அவர்களை ஆவிகள் ஒன்றும் செய்வதில்லையே ஏன்???

உங்கள் மனம்தான் பேய்... மூடநம்பிக்கையால் நீங்கள்தான் பேயை உருவாக்குகிறீர்கள் ,பேயாகுகிறீர்கள்!!