தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

உலகத்தவர் பசி தீர்க்க உழுதவனும் உண்டு களிப்புற பொங்கிடு பாலே பொங்கிடு !!!


பொங்கட்டும் பால் பொங்கட்டும் 
பால் போல் உழவர் வாழ்வும் 
பொங்கட்டும் 

வேண்ணிறபால் மேலெழுந்து வர 
வெடி வெடிப்போம் நாங்கள் 
வெடிபோல் உழவர் பட்டினியும்
வெடிவெடித்து போக
பொங்கிடு பாலே
பொங்கிடு

உலகுக்கே உணவிடும்
உழவர்களுக்கு உதவிடும்
உதயனுக்கு நன்றி சொல்ல
பொங்கிடு பாலே பொங்கிடு

பூமி சிரிக்க அழுதிடும்
வானம்போலல்லாமல்
உலகத்தவர் பசி தீர்க்க
உழுதவனும் உண்டு
களிப்புற பொங்கிடு
பாலே பொங்கிடு

தமிழர்க்காய் போராடி
நாதியற்று நலிவுறும்
முன்னாள் போராளிகளின்
நடுவீதி வாழ்வுதனை
நலம்பெற உதவிடும்
நல்லோரின் மனங்களும்
பொங்கிட பாலே பொங்கிடு


என் முகம் தெரியாமலே நட்பாகி
என்முகம் மலர அன்புகாட்டும்
வலைப்பூ நண்பர்களுக்கு
என் இனிய தைத்திருநாள்
வாழ்த்தை சொல்ல
முழங்கிடு இடியே
முழங்கிடு.

சவுதியில் பார்திமாவால் கற்பழிக்கபட்ட ரகுமான். தொடரும் உண்மை .



எனது நண்பர் ரகுமான் என்று வைத்துகொள்ளுவோம் சவுதிக்கு வேலைக்கு சென்றார் வாகன ஓட்டுனராக அங்கு முகம்மது என்ற ஒரு நபரின் இரண்டாவது மனைவி பார்த்திமா வீட்டில் உள்ள வாகனத்தை ஓட்டுவதுதான் இவர் வேலை முகமதுவின் மனைவிக்கு இரு பெண் குழந்தைகள் அவர்களில்  ஒருவர் ஆரம்ப பாடசாலைக்கு செல்பவர் அவரை கூட்டி செல்வது மற்றும் இந்த குடும்பத்தின் தேவைகளுக்கு ஒவ்வொரு இடத்துக்கு செல்வதுதான் ரகுமானின் வேலை.

முகமதுவுக்கு மொத்தம் நான்கு மனைவிகள் இவர் பார்த்திமா வீட்டுக்கு எப்போவதாவது அத்தி பூத்தால் போல் வருவாராம். முகமதுவின் நான்காவது மனைவி சிறு வயதென்பதால் அவர் எப்போதும் அங்கேயே இருந்திருக்கிறார் பணம் மட்டும் தவறாமல் பார்த்திமா வீட்டுக்கு வந்துவிடும்.

பார்த்திமா வீட்டில் இலங்கையை சேர்ந்த ஒரு பெண்ணும் வேலைக்கு இருந்திருக்கிறார் அவர் பெயர் கரீனா என்று வைத்துகொள்வோம் ரகுமானுக்கு கரீனா மீது காதல் பார்த்திமாவுக்கு ரகுமான் மீது மோகம்.

பார்த்திமா ரகுமானை தவறான உறவுக்கு அழைத்திருக்கிறார் ரகுமான் மறுக்கவே அவரை பயமுறுத்தி இருக்கிறார் நீ என்னை பலாத்காரம் செய்யவந்தாய் என்று உன் மீது பழி பொட்டால் உனக்கு என்ன தண்டனை ,எதை வெட்டுவார்கள் என்று தெரியுமா என்று. இதற்கு பயந்து ரகுமானும் வேறு வழி இன்றி சமதித்திருக்கிறான்.இது சில மாதங்களாக தொடர்ந்திருக்கிறது ரகுமான் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கு சுப்பர் மார்கெட்டில் வேலை செய்த அவன் நண்பனுக்கு விடயத்தை சொல்லி இருக்கின்றான் அவன் ரகுமானை பயமுறுத்தியிருக்கிறான் இனி உன் கதை முடிந்தது உனக்கு இங்கு மரண தண்டனைதான் என்றெல்லாம் ரகுமானோ அடுத்த இரு மாதத்தில் சவுதியும் வேண்டாம் பணமும் வேண்டாம் என்று இலங்கை சென்று விட்டான்.

இஸ்லாத்தின் பல தார சட்டத்துக்கு இஸ்லாமியர்கள் சொல்லும் காரணம் ஆண்களை விட பெண்கள் அதிகமென்பதால் அவர்களை ஆண்கள் வைத்திருக்கிறார்கள் என்பதை விட பல தாரம் கொள்கையின் படி மணம் முடித்து வைத்திருக்கிறார்கள் என்பது கௌரவம் என்று. இப்படி கௌரவபடுபவர்கள் பலதார மனைவிகளை திருப்தி படுத்த முடியுமா என்று சிந்தித்து மணம் முடியுங்கள் இல்லை அவர்கள் மனைவிகள் வேறு ஆண்களை வைத்துகொள்வார்கள். பெண்களை ஆண்கள் வைத்திருக்கிறார்கள் என்று சொல்வார்கள் என்பதுக்காக நியாயபடுத்தும் பலதார கொள்கை மணம் முடித்த பின்னும் பெண்கள் வேறு ஆண்களை வைத்திருக்கிறார்கள் என்ற கெட்ட பெயரை உருவாக்கிவிடாமல் பார்த்துகொள்ளுங்கள். நீங்கள் பலதார சட்டத்திற்கு சொல்லும் நியாய படுத்தல் பொய்த்துபோகாமல் பார்த்துகொள்ளுங்கள். நான் எல்லோரையும் சொல்லவில்லை..................