தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

கமலை(குருவை) மிஞ்சிய அன்ட்ரியா .. படங்கள்,காணொளிகள்



இன்று இணையத்தை மட்டுமல்ல இளையவர்களை கிசுகிசுக்க வைக்கும் விடயம் அன்ட்ரியா அனிருத் .... இப்படியான விடயங்களுக்கு கொடுக்கபடும் முக்கியத்துவம் ஏனோ பல சமுதாய சீர்கேடுகளுக்கு கொடுப்பதில்லை. இது என்ன மனநிலை புரியவில்லை எனக்கு...
படங்களில் சிலர் தங்கள் பெயர்களை போட்டு புகழ் தேட முயல்வது இன்னும் ........

இருவருடைய அந்தரங்கங்களை உணர்வுகளை இப்படி படம் பிடித்து ரசிப்பது சரியானதா? இருவருடைய விருப்பங்கள் சம்பந்த பட்ட விடயங்களை மற்றவர்கள் குறை சொல்வதுவும்  அவர்களை கேவலமானவர்களாக சித்தரிப்பதுவும் சரியானதா?

அவர்கள் செய்தது தவறென்றால் அதை தேடு தேடி பார்க்க விரும்புவது????

இந்த விடயம் எனக்கு உண்மையில் தெரியாது எனது நண்பனை சந்திக்க சென்ற வேளை அவனுடைய நண்பன்  என்னோடு அறிமுகமாகினான்.நண்பனின் வீட்டருகில் கடல் இருப்பதால் அப்படியே பேசி பேசி கடற்கரையில் அலைகளின் இசைக்கு எங்கள் நடைகளை நடனமாக்கி நடக்க தொடங்கினோம் பல விடயங்களை பேசிக்கொண்டே போகும் போது இந்த விடயமும் வந்தது... அவன் இதை சொன்ன விதம் என்னை அப்படியே சுனாமி அடித்தது போல இருந்தது ... கமல் கமல்தான் என்றான் என்ன கொடுமை கமலுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம் என்று சிந்திப்பதுக்குள் சொல்லி முடித்தான் கமல் விஸ்வரூபத்தில் நல்லாத்தான் சொல்லி கொடுத்திருக்கிறார் என்றான்.
ஆனால் குருவை மிஞ்சி விட்டார் அன்ட்ரியா என்றான்..........எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுகிறான் பார்த்தீர்களா? 
இதுவும் திறமைதான் ஆனால் அதை சரியான இடத்தில் பயன்படுத்தாத திறமை என்றே சொல்ல வேண்டும்.

நித்தியானந்தா விடயம் வேறு துறவறம் என்று சொல்லி சாமி என்று சொல்லி லீலைகள் செய்தவன்.. வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டியது... ஆனால் இது??????????? இப்படி ஊதி பெரிதாக்குவது சரியானதா? 

நண்பர்களே தலைப்பை பார்த்து ஏதோ எதிர் பார்த்திருப்பீர்கள் .....

ஹிஹி... 

9 comments:

  1. Can you please let me know where you got the picture that is in top of your web page (Two poor boys). My eyes get filled with tears everytime I see this picture. I want to do something for this boys , I would highly appreciate if you can provide any details about it. I assume you got it from internet. Even the photographer's name if you know is useful to me , I can follow it up.

    ReplyDelete
  2. Sorry forgot to add my email Id - ithimayalogam@gmail.com
    - Maya

    ReplyDelete
  3. அது ஒரு சித்திரம்.......

    ReplyDelete
  4. Replies
    1. கொடுமை அல்ல நண்பரே கொலைவெறி ..இந்த சொல்தான் இங்கு சரியாக பொருந்தும்...

      Delete
  5. முத்தத்தை விட
    நீங்கள் சொல்லிப்போனவிதம் அருமை
    சுவாரஸ்யமானபதிவு

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தொடர் வருகை என்னை மகிழ்ச்சிகொள்ள வைக்கிறது... நன்றி தோழரே..

      Delete
  6. நன்றி தோழா... என் பதிவிலும் இதையே சொல்லியுள்ளேன். வந்து பாருங்கள்...
    http://varikudhirai.blogspot.com/2012/08/actors-personel-matter.html

    ReplyDelete
    Replies
    1. சரி தோழரே.. நன்றி உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்..

      Delete