தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

இலக்கணங்கள் மாறுது ...


அலையின் சத்தத்தை  கொண்டு 

ஆழ் சமுத்திரத்தினை அறிந்திடலாமோ 

என் மௌனித்த உதட்டசைவால்  
உள்ளத்தன்பை வெறுத்திடலாமோ ...

நிலவுக்குள் பூமியை புதைத்திடலாமோ 
உன்னை நானும் மறந்திடலாமோ...

விசத்துளி பாலை விசமாக்குவது போல் 
ஊடல் ஒன்று கூடல்களை மறந்திடலாமோ...

தி.மு.க போல மாநாடுகள் நடத்தி 
நானும் போலிமுகங்கள் காட்டியிருந்தால் 
என் அன்பு புரிந்திருக்குமோ ...

பணம் கொண்டு அளந்திடும் மானிடத்தை 
மனம் கொண்டு அணைத்திட நினைத்தது 
சினம் கொண்டு சிதைபடுவதற்காகவா ...!!!



4 comments:

  1. இன்றைய நிலவரத்தையும் சேர்த்துக் கொண்டது அருமை...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...


    சின்ன வேண்டுகோள் : இந்த உலவு லோகோ அல்லது ஓட்டுப்பட்டையை எடுத்து விடவும்.

    உங்கள் தளம் திறக்க ரொம்ப நேரம் (more than 10 minutes)ஆகிறது...
    "Waiting for ulavu.com" என்று வருகிறது...


    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.bloggernanban.com/2012/06/remove-ulavu-vote-buttons.html) சென்று பார்க்கவும். நன்றி !

    ReplyDelete
  2. @seeni
    ஹிஹி.. உங்கள் வரவுக்கும் கருத்து பதிவுக்கும் நன்றி..

    ReplyDelete
  3. @திண்டுக்கல் தனபாலன்
    உங்கள் தொடர் வருகையும் வாழ்த்தும் கருத்தும் என்னை இன்னும் தூண்டுகிறது... நன்றி தோழரே..

    அவற்றை நீக்கிவிடுகிறேன்..

    ReplyDelete