தொடரும் தோழர்கள்......................
பட்டியல்
அனுபவம்
(72)
புனைவுகள்
(42)
நகைச்சுவை
(41)
சமூகம்
(35)
கவிதை
(28)
கட்டுரை
(22)
சினிமா
(22)
மூடநம்பிக்கை
(17)
கணனி
(16)
தொழில்நுட்பம்
(13)
அரசியல்
(12)
செய்திகள்
(11)
மென்பொருள்
(11)
இணையம்
(7)
பெண்கள் அறிவுரை
(7)
வீடியோ
(5)
18+
(3)
ஆன்மீகம்
(3)
வறுமை
(3)
அலைபேசி
(2)
காதல்
(2)
சிறுகதை
(2)
Anirudh Kissing Andrea
(1)
இணையத்தில் பணம் சம்பாதிக்க....Online job
(1)
ஈழம்
(1)
தமிழ்.
(1)
தமிழ்மணம்
(1)
தொலைக்காட்சி
(1)
பசி
(1)
பரிந்துரை
(1)
பேய்
(1)
விளையாட்டு
(1)
மின்கோவில் (e-temple இணையத்தில் இறைவன்) புதிய புரட்சி
ஒரு சிறிய கற்பனை ஆனால் இது எதிர்காலத்தில் நடைமுறையில் வந்தாலும் அதிசயபடுவதற்கு இல்லை இன்றைய கோவில்கள் நல்லதொரு வியாபார தலங்களாக இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஏழைகள் கோவில்களில் சாமிகும்பிட்டு வரும்போது அவர்கள் மனதில் நிம்மதி கிடைப்பதில்லை காரணம் கோவிலுக்குள் நுழைவதுக்கே கட்டணம் அதிலும் ஒவ்வொரு விதமான வாசல்கள் உண்டு அது அவர்கள் எடுத்திருக்கும் சீட்டை பொறுத்தது. அதிக பணம் செலுத்தியவர்கள் ஒரு வாசலாலும்,குழந்தைகள் வயதானவர்கள் வருசையில் வாடிகொண்டிருப்பர்கள் நடிகர்கள் அரசியல் வாதிகள் விசேட வரவேற்பு இப்படி தரம் பிரித்து பணமே செலுத்த முடியாதவர்கள் மனங்கள் கோவிலிலேயே நோகடிக்கபடுகிறது ஏழ்மையில் வாடி இருக்கும் கஷ்டங்களை சொல்லி கடவுளிடம் அழுது கவலைகளை இறக்கி வைத்து ஆறுதல் தேடி போகும் பாமர மக்கள் அங்கும் நோகடிக்க படுவதுதான் கடவுளின் நடுநிலையா? எதுக்காக பலதரபட்ட சீட்டுகள் அதை பொறுத்துதான் கடவுளிடம் இவர்கள் சிபாரிசு இருக்குமோ?(உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருநாளும் தெய்வம் கொடுத்ததில்லை) இதில் கடவுளை குறை சொன்னால் பலருக்கு பிடிப்பதில்லை இதெல்லாம் கடவுளா செய்கிறார்? மனிதன் தானே வியாபாரம் செய்கிறான் செய்பவர்களை ஏசுங்கள் என்கிறார்கள் இதெல்லாம் யார் பெயரில் செய்யபடுகிறது கடவுளின் பெயரில்தானே ? இன்றைய காலத்தில் கடவுள் ஒரு சாராருக்கு நல்லதொரு மூலதனம் சிலருக்கு கடவுள் இல்லை என்று சொல்வது மூலதனம் இதை வைத்து இவர்கள் பிழைப்பு நடத்திகொண்டிருக்கிறார்கள்.இவற்றை பற்றி பலர் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் கடவுளின் பெயரில் சுரண்டுபவர்க்களும் சுரண்டபடுபவர்களும் அவர்கள் பேச்சை கேட்பதாக தெரியவில்லை... இதை கடவுள் கூட வேடிக்கபாத்துகொண்டிருப்பது மிகப்பெரிய வேடிக்கை (அவனன்றி அணுவும் அசையாது) சரி நான் விடயத்துக்கு வருகிறேன் இப்படியாக மாறிக்கொண்டு போகும் இறைவழிபாடு இணையமயமாக்க பட்டால் ..
உலகத்தில் உள்ள எல்லா கோவில்களும் ஒன் லைன் ஆக்கபட்டும் இணைப்பில் இருக்கும் புதிதாக கோவில் கட்டுபவர்கள் கூட இவர்களிடம் அனுமதி வாங்கியே கட்டவேண்டும். இப்படி இணைப்பில் இருக்கும் கோவில்களுக்கு நீங்கள் உங்கள் வீட்டில் இருந்துகொண்டே அர்சனை செய்யவும் வழிபடவும் முடியும் அதாவது நீங்கள் மின் கோவில் இணையத்தில் அர்சனை என்ற தெரிவை தெரிவு செய்து உங்கள் பெயர் ,நட்சத்திரம்,ராசி அர்சனை ரகம் நீங்கள் செலுத்தும் பணத்தின் அளவை பொறுத்து தீர்மானிக்கப்படும். உங்கள் அர்சனை ஒலி வடிவில், உங்கள் அர்சனை காணொளி வடிவில் விரும்பியவர்களுக்கு மினஞ்சலில் அனுப்பி வைக்கப்படும் அதற்கு அர்சனை ரகத்தில் தெரிவை தெரிவு செய்யுங்கள் உங்களுக்கு பிரசாதம் பொதியாக அனுப்பி வைக்கவேண்டுமா கடைசி தெரிவை தெரிவு செய்யுங்கள்.
உண்டியலில் பணம் செலுத்தி இறைவனின் அருளை அள்ளிட e -உண்டியல் தெரிவை தெரிக...
காணிக்கை செலுத்த e-காணிக்கை எந்த தெரிவை அழுத்துக ...
இது நகைசுவைக்காக கற்பனை செய்ததாக இருக்கலாம் ஆனால் இப்படி ஒரு முறை வந்தால் இதில் பணம் செலுத்த கூட தயாராக பலர் இருக்கத்தான் செய்கிறார்கள் இப்படியானவர்கள் இருக்கும் வரை இதுபோல முட்டாள் தனமான செயல்கள் இன்னும் வளர்ந்துகொண்டேதான் போகும்.
2012 .12 .21 காலை மணி 11:11 க்கு உலகம் அழியுமா? அழியாது!!!
உலகம் இப்போதெல்லாம் சந்தித்துவரும் அழிவுகளை காலநிலை மாற்றங்களை அவதானிக்கும் மக்களுக்கு மெதுவாக ஒரு பயம் மனதில் வேருன்றி இருப்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை ஆனால் இங்கு இப்படியான ஒரு வதந்தி /செய்தி வருவதற்கு என்ன காரணம் என்பதை நாங்கள் அராய்ந்து பார்த்தால், கிமு 2000 ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்காவில் மாயா என்ற ஓர் இனம் இருந்தது. 3500 ஆண்டுகள் வாழ்ந்த இந்த இனமானது கடந்த 15-ம் நூற்றாண்டில் அழிந்தது. இந்த இனத்தினர் விஞ்ஞானிகளைவிடவும் புத்திசாலியாக வாழ்ந்ததாக சரித்திரச் சான்றுகள் கூறுகின்றன. மாயன் இனத்தவர் கட்டிடக் கலை, வான சாஸ்திரம், ஜோதிடம், அமானுஷ்யம், கணித சூத்திரம் போன்ற அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி பெற்ற வித்தகர்களாக இருந்தனர். இன்றைக்கு இருப்பது போன்ற ஒரு நாட்காட்டியினை அவர்களும் வைத்திருந்தனர். இந்தக் காலண்டர் கிமு 313ல் தொடங்கியது. இதன்படி டிசம்பர் 2012ன் 21ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் உலகம் அந்தத் தேதியுடன் முடிவடையும் என்று அவர்கள் ஞானதிருஷ்டியால் உணர்ந்து முற்றுப்புள்ளி வைத்ததாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதாவது சூரிய மண்டலத்திற்கு 7நாள் என்பது பூமியைப் பொறுத்தவரை 25,625 வருடங்களாம். இதனை மாயன் காலண்டர் 5 கால கட்டங்களாகப் பிரிக்கிறது. ஒவ்வொரு கால கட்டமும் 5125 வருடங்களைக் கொண்டிருக்கிறது. இதன்படி 5 கால கட்டங்கள் முடிவடைந்து மீண்டும் அடுத்த சுற்று அரம்பிப்பதைதான் உலகம் அழியும் என சினிமாவும் மக்களும் இப்படி விமர்சனத்துக்குள்ளாக்குகிறார்கள்.அது முடிவடையும் காலம்தான் அந்த நாட்காட்டி 21.12.2012ல் குறித்து நிக்கிறது. அதன்படி 21.12.2012ல் உலகு அழியும் என்று பலர் நம்புகிறார்கள்.
பூமி தன்னை தான் சுற்றுகிறது அது ஒருநாள், சந்திரன் பூமியை சுற்றிவர எடுக்கும் காலம் ஒரு மாதம், பூமி சூரியனை ஒரு தடவை சுற்றி முடிக்கும் போது சந்திரன் பூமியை பன்னிரண்டு முறை சுற்றி முடிக்கிறது. இது ஒரு வருடம் .இது இப்படி இருக்க இந்த சூரியன் தன்னை தானே சுற்றிக்கொண்டு கறுப்பு ஓட்டை (black hole ) என்று சொல்லப்படும் ஒரு மையத்தையும் சுற்றுகிறது அப்படி அந்த கறுப்பு ஓட்டையை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் 25625 வருடங்கள் அந்த காலபகுதியில் சூரியன் தன்னைத்தான் 7 முறை சுற்றி முடிக்கிறது. இந்த சுற்றைதான் ஐந்தாக பிரித்து மாயன் இனமக்கள் குறித்து வைத்துள்ளார்கள். எனவே அவர்கள் ஒரு சுற்றை சரியாக குறித்து பூர்த்தியாக்கி முடித்து வைத்துள்ளார்கள் என்றே சொல்லவேண்டும்.
ஒரு நாளில் இருபத்தி நான்கு மணி நேரம் என்பதை சரியாக வகுத்து சொன்னால் போதுமானது அடுத்தநாள் அதுபோலவே இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும்.அதுபோலவே வருடமும். அதனால் மாயன் இன மக்கள் ஒரு சரியான பூரண சுற்றி முழுமையாக வகுத்து முடித்து இருக்கிறார்கள் அதன் படி மீண்டும் மீண்டும் இவ்வொரு 25625 வருடங்களுக்கு ஒரு தடவை சூரியன் தனது சுற்றை பூர்த்தியாக்குகிறது (கறுப்பு ஓட்டையை சுற்றி).
அவர்களது குறிப்பில் சூரிய தொகுதியின் ஒரு முழுமையான சுற்றை பூர்த்தியாக முடித்து இருக்கிறார்களே தவிர அது உலக அழிவல்ல அவர்கள் எந்த இடத்திலும் உலகம் இந்த காலகட்டத்தில் அழிந்துவிடும் என எங்கும் கூறவில்லை என்பது இங்கு குறிப்பிடதக்கது.
வாசகர்களே இங்கே குறிப்பிட்டவை எல்லாம் இணையத்தில் பலர் எழுதிய கட்டுரைகளை வாசித்து அதில் இருந்து நானாக என் சிற்றறிவுகொண்டு தொகுத்து எழுதிய முடிவு. இது பிழையாகவும் இருக்கலாம்.ஏதொ என்னால் முடிந்தது........
எல்லா மொழி குழந்தையும்,மாடும் அம்மா என்று தமிழில்தானே கத்துகிறது .....
சின்ன வயதில் எனக்கு பல சந்தேகங்கள் அப்பப்ப வந்து போகும் அவற்றுக்கு என்னால் பதில் கண்டுபிடிக்கமுடியாததால் அப்படியே மறந்து விடுவேன். அது போலதான் இந்த சந்தேகமும் எங்க வீட்டு மாடு எப்படி அம்மா என்று தமிழில் கத்துகிறது என்பதுதான் அதே நேரம் எனக்கு இன்னொரு சந்தேகம் இருந்தது சிங்களவர்கள் வீட்டு மாடு சிங்களத்தில் கத்துமா? வெள்ளைகாரர்களில் மாடு ஆங்கிலத்தில் கத்துமா? என்பதுதான்.
இதுபோல பல சந்தேகங்கள் அப்போதெல்லாம் வரும் யாரிடமும் கேட்க வெட்கமாக இருக்கும் அப்படியே கால ஓட்டத்தில் மறந்துவிடுவேன் அப்படி மறந்தவை பல இப்போதெல்லாம் நினைவுக்கு வந்து சிந்திக்க வைக்கிறது. அப்படியான ஒரு விடயம்தான் எப்படி மாடு அம்மா என்று கத்துகிறது? மாட்டுக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்? மாடு தமிழர்களின் பிராணியா?
எல்லோரும் எவ்வளவு சந்தோசமா இருக்காங்க எனக்கு மட்டும் எதுக்கு இப்படியெல்லாம் ஆகுது எதாவது ஒன்றை பார்த்தமா போனமா இல்லாம எதை பார்த்தாலும் அது ஏன்? எப்படி? எதுக்கு? ஆயிரம் கேள்விகள் உடனே வருது என் நிம்மதியை கெடுக்குது. இந்த மனவியாதியை நிறுத்த எதாவது மருந்து இருக்கா? இருந்தா சொல்லுங்க....
சரி அதை விடுங்க நாம இப்ப என் பிரச்னைக்கு வருவோம் மாடு மற்றும் பிறக்கும் குழந்தை யாரும் சொல்லி கொடுக்காமலே அம்மா என்று கத்துகிறது எப்படி.
எங்கள் நாவில் இருந்து வரும் எல்லா ஒலிகளும் எங்கள் சுவாசப்பையில் இருந்து வரும் காற்று வாயிலும் மூக்கிலும் வெளியாவதை பொறுத்து நா அசைந்து கொடுத்து உதடுகள் சேர்ந்து பிரிந்து ஒலிகளை எழுப்புகிறது மூக்கை மூடிக்கொண்டு சில சொற்களை சொல்ல முடியாது அதே போல நாவை அசைக்காமல் சில சொற்களை சொல்ல முடியாது ,சில சொற்கள் உதடுகள் சேராமல் சொல்ல முடியாது.
பிறந்த குழந்தைக்கு பொதுவாக குழந்தை அழும் போதுதான் இந்த சத்தம் முதலில் வெளிபடுகிறது.குழந்தை அழும் போது சுவாசப்பையில் இருந்து வெளியாகும் காற்று மூக்கின் ஊடக வெளியாகும் போது "ம்" என்ற ஒலியையும் வாயை நன்றாக திறக்கும் போது "ஆ" என்ற ஒலியும் வருகிறது இது இரண்டும் சேர்ந்து ம்ஆ.ம்ஆ என்று சேரும் போது அது அம்மா என்பது போலுள்ளது. குழந்தை அழும்போது வாயை திறந்து திறந்து மூடுவதால் ம்மா..ம்மா..ம்மா என அழகாக ஒலிக்கிறது.
மாடு கத்தும் போது முதலில் ம் என்ற ஒலி வருகிறது பின் அது ஒரேயடியாக வாயை திறந்தே கத்துவதால் ஆ என்ற ஒலி தொடர்ச்சியாக வருவதால் அது கத்தும் போது ம்மாமாமாமாமா என்று ஒலிக்கிறது.
இதே போல ஆடு வாயை பெரிதாக திறக்காமல் கத்துவதால் முதலில் "ம்" என்ற ஒலியும் பின் "மே" என்ற ஒலியும் வந்து ம்மே ... ம்மே என சிங்களத்திலும் கத்துகிறது.
எனவே தமிழுக்கும் மாட்டுக்கும், பிறந்த குழந்தைக்கும் இதேபோல ஆட்டுக்கும் சிங்களத்துக்கும் ஆட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இதில் எந்த மாயமும் இல்லை.
ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா ........... ஒரு வழிய இந்த பிரச்சனை முடிஞ்சிடுச்சு ...........
இனி இனி என்னென்ன வருமோ தெரியல்லையே.........
வெற்றியின் ரகசியம்
ஆசைகள் மிக சுலபமாக எங்கள் மனதை ஆட்கொள்கிறது அதனை அடைய முடியுமா இல்லையா என எதையும் ஆராயாமல் அது பாட்டுக்கு கனவு காண்கிறது எல்லாம் நிறைவேறிவிட்டதாக .... ஆசை இல்லை என்றாலும் வாழ்க்கை எதிர்பார்ப்பு இருக்காது உப்பில்லாத உணவு போலாகிவிடும். அளவுக்கு அதிகமானாலும் அதுவே வாழ்கையையும் அழித்துவிடும். எனவே இந்த ஆசையை எப்படி வகைபடுத்துவது எதை நோக்கி எங்கள் பயணத்தை ஆரம்பிக்கவேண்டும் என்று முடிவெடுப்பது மிக முக்கியம். சிந்திக்க தெரியாத ஆழ்மனம் ஆயிரம் சொல்லும் பின்விளைவுகளை சிந்திக்காது. எந்த ஒரு ஆசை யாரையும் பாதிக்காமல் தொந்தரவு செய்யாமல் எங்களுக்காக நிறைவேற்ற முடியுமோ அதை நிறைவேற்றுவதில் எந்த தவறும் இல்லை. அதுவே எங்கள் ஆசை நிறைவேறுவதில் இன்னொருவர் சுகந்திரம் பறிபோகிறது என்றால் அதை நிறுத்திவிடவேண்டும். தவறான ஆசை. அடுத்த படியாக எங்கள் ஆசையில் எங்களுக்கும் பயனிருந்து இன்னும் பலருக்கும் பயனாக இருந்தால் அந்த மாதிரியான ஆசைகள் எங்கள் இலட்சியங்களாகவே நாங்கள் கருதலாம்.
அறிவு மட்டும் இருந்தால் வெற்றியடைந்துவிடமுடியுமா? இந்த உலகத்தில் பல அறிவாளிகள் இருக்கிறார்கள் அவர்கள் எல்லோரும் வெற்றியாளர்களா? இல்லை அவர்களில் பலருக்கு விடாமுயற்சி, உழைப்பும் ,பொறுமை,நம்பிக்கை இருப்பதில்லை "புத்தியுள்ள மனிதன் எல்லாம் வெற்றி காண்பதில்லை" என்ற சந்திரபாபுவின் பாடல்கள் நினைவுக்கு வருகிறது இப்போதெல்லாம் பலர் ஏதோ அலுவலகம் சென்றோம் முடித்து வந்தோம் என்ற சாதாரண வாழ்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் இவர்கள் யாருக்கும் தொந்தரவில்லாதவர்கள் ஆனாலும் இவர்கள் முயற்சி என்பது புதிதாக ஒன்றும் இருந்துவிடபோவதில்லை இவர்கள் வாழ்வில் பாரிய வெற்றிகள் இருக்காது ஆனாலும் இவர்கள் அறிவாளிகள்தான் . இருக்கும் வாழ்க்கை போதும் என்று அதையே வாழ பழகிக்கொண்டவர்கள், இதில் குறை எதுவும் இல்லை. அறிவு மட்டும் வெற்றியை தந்துவிடாது.
இந்த முயற்சி எப்படி உருவாகிறது?
எனவே வெற்றிக்கு அறிவு,நம்பிக்கை,பொறுமை,முயற்சி,உழைப்பு எல்லாமே முக்கியமாகிறது..
இந்த கட்டுரை சம்பந்தமான எங்கோ வாசித்த ஒரு கருத்து நினைவுக்கு வருகிறது....
நூறு முறை முயற்சித்து ஒரு தடவை வெற்றியடைந்தேன் 99 தடவை தோல்வியில் இருந்து நூறு முறை வெற்றியடைவது எப்படி என்பதை அறிந்துகொண்டேன்.ஆயிரம் தடவை முயற்சி செய்யவேண்டும் என்பதுவே அது.
வெற்றி என்பது ஆசை பட்டதும் வந்துவிடுவதில்லை
எதுவும் செய்யாமல் வரவில்லை என்றதும் குறைகளை
வேறு இடங்களில் திணிப்பதால் எதுவும் நடக்க போவதில்லை.......
மனம் பழகிபோனால் குணம்.
மனம் பற்றி அறிந்துகொள்ள எடுக்கும் முயற்சிகள் சமுத்திரத்தின் நடுவே திடீரென குதிப்பது போலான ஒன்று ஆனாலும் வேறு வழியில்லை எங்களை ஆட்டி படைத்துகொண்டிருப்பது எங்கள் மனம் தான். எங்கள் ஆசைகளை உருவாக்குவதும் அதில் ஏற்படும் முடிவுகளை பொறுத்து மகிழ்ச்சியையும், சோகத்தையும் உருவாக்குவது இந்த மனம் தான். எனவே இதை பற்றி அறியாமல் வாழ்கையை அறியமுடியாது. நாங்கள் சும்மா இருந்தாலும் எங்கள் மனம் எங்களை சும்மா இருக்க விடுவதில்லை ஏதாவதொரு ஆசையை உண்டாக்கி எங்காவது ஒரு சிக்கலில் மாட்டி விடுகிறது. எண்ணங்களை உருவாக்கி எண்ணவேகத்தில் செயல்படுகிறது என்றே தெரியாமல் தாவி திரிகிறது.
எங்கள் மனதில் ஒவ்வொரு எண்ணங்களும் எப்படி உருவாகிறது இதற்கு எங்கள் ஐம்புலன்களும்தான் காரணம். இந்த ஐம்புலன்களும் உள்வாங்கும் ஒவ்வொன்றுக்கும் ஏற்றது போலான எண்ணங்களையும் அதற்கு தொடர்புடைய ஏற்கெனவே எங்கள் ஆழ் மனதில் பதிந்திருப்பதை நினைவுக்கு கொண்டு வருகிறது. எங்களுக்கு தெரியாமலே எங்கள் வாய் ஒரு பாடலை முனுமுனுக்கும் எதற்கு திடீரென இந்த பாட்டு நினைவுக்கு வந்தது என தேடி பார்த்தல் எங்கோ இந்த பாட்டு எங்கள் காதுக்கு மெதுவாக கேட்டிருக்கும். இதில் இருந்து ஒரு விடயத்தை நாங்கள் புரிந்துகொள்ள முடியும் ஒரு விடயத்தை நாங்கள் நினைவு வைதிருக்கவேண்டுமாயின் ஏற்கெனவே எங்கள் மனதில் பதிந்திருக்கும் ஒரு விடயத்துடன் தொடர்பு படுத்தி நினைவு வைத்துகொண்டால் எப்போதும் மறக்காது என்பதுவே.புதிதாக ஒருவருடைய பிறந்த நாளை நினைவில் வைத்துகொள்ள விரும்பும் நாங்கள் அந்த திகதியை வெளிமனத்தில் பல தடவை மீட்பதற்கு பதிலாக ஏற்கெனவே நினைவில் இருக்கும் ஒருவருடைய பிறந்த நாளுக்கு இரண்டு நாளுக்கு பின் என பதிந்து விட்டால் அது மறக்காது. இதில் இருந்து இன்னொரு விடயத்தையும் நாங்கள் புரிந்துகொள்ள முடியும் எங்கோ ஒலித்த பாடல் மெதுவாக கேட்டதும் அதுக்கான விளைவை ஆழ்மனம் காட்டுகிறது ஒருவருக்கு ஒரு சோகமான சம்பவம் ஒரு இடத்தில் நடந்தால் அவர் அதில் இருந்து வெளிவராமல் அந்த சம்பவம் அவர் மனதில் அதிர்வுகளை ஏற்படுத்திகொண்டிருந்தால் அவரை அந்த சூழ்நிலையில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றுதல் சிறப்பு இல்லை என்றால் அவர் காணும் கேட்கும் எல்லா விடயங்களையும் எங்களை அறியாமல் ஆழ்மனம் எண்ணங்களை உருவாக்கிக்கொண்டு இருக்கும். எங்கள் வாழ்கையில் நடந்த சம்பவங்கள் நல்லதாக இருந்தால் அது சம்பந்தமானவற்றால் எங்கள் மனதில் நல்ல மகிழ்ச்சியனவையே நினைவுக்கு வரும் அதுவே மாறாக சோகமும், துன்பங்கள் நிறைந்த ,கேவலமான சம்பவங்களாக இருந்தால் அது சம்பந்தமானவை எங்கள் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும். எனவே எங்கள் மனதில் நல்லவற்றை பதிய விரும்பினால் உங்களை சுற்றி எப்போதும் நல்ல சூழலை உருவாக்கி கொள்ளுங்கள்.
ஒரு சைக்கிளை அல்லது ஒரு வாகனத்தை முதல் முறை பழகும் போது எவ்வளவு கவனத்துடன் பழக்குகிறோம் முழு சிந்தனையும் வீதியில் இருந்தாலும் பல தவறுகளை செய்துதான் விழுந்து எழும்பி பழகுகிறோம் ஆனால் அதுவே பழகி அதன் முறை எங்கள் ஆழ்மனதில் பதிந்துவிட்டால் அதன் பின் எத்தனையோ சிந்தனைகளின் மத்தியில் அந்த வாகனத்தை எங்களால் சரியாக ஓட்ட முடிகிறது இது ஆழ்மனதினால் சாத்தியமாயிற்று. சில நேரத்தில் ஏதோ சிந்தனையில் வாகனத்தை ஓடிகொண்டே போவோம் நாங்கள் போக வேண்டிய இடம் வேறாக இருக்கும் ஆனால் வாகனம் வழமையாக நாங்கள் போகும் ஒரு இடம் நோக்கி போய்கொண்டிருக்கும் நாங்கள் திடீரென சுயநினைவுக்கு வரும்போது இதை உணர்ந்துகொள்ளலாம். இதுபோலவே எங்கள் வாழ்கையில் பல விடயங்களுக்கு கட்டுபாட்டுடன் ஆரம்பத்திலேயே பழகி கொண்டால் அதுவே ஆழ்மனதில் பதிந்துவிட்டால் அதன் பின் எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் ஆழ்மனம் அதையே செய்யதுண்டும். இதில் இருந்து நாங்கள் புரிந்துகொள்ளவேண்டியது சிறு வயதிலேயே பல நல்ல பழக்கங்களை கட்டுபாட்டுடன் பழக்கி ஆழ்மனதில் பதியவைத்துவிட்டால் அது அவர்கள் வாழ்நாள்முழுவதும் அவர்கள் சிறப்பாக இருக்க உதவும்.
எந்த ஒரு விடயமும் முதல்தடவை செய்யும் போது தவறாக தோன்றும் அதன் பின் அது ஆழ்மனதில் அது பதிந்தபின் அது பிழையான விடயமாக தெரிவதில்லை. முதல் தடவை தவறு செய்யும் போதே திருத்திக்கொள்ளவேண்டும்.இல்லையென்றால் அதன்பின் அதை மாற்றிகொள்வது மிககடினமனதாகும். வெளிமனம் இது தவறு என்று சொன்னாலும் அதை ஏற்றுகொள்ளாது ஆழ்மனம் அப்படி ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நாங்கள் முயற்சி செய்தாலும் சிலநாட்களில் ஆழ்மனம் வெளிமனத்தை அடக்கிவிடும் இன்று மட்டும் செய்யலாம் நாளில் இருந்து தவிர்த்துவிடலாம் என்று சமாதானமும் சொல்லும். இதுபோல ஆழ்மன அடிமைத்தனம்தான் போதை ,குடி,புகை பழக்கங்களுக்கு அடிமையாகியவர்களின் நிலை இதில் இருந்து விடுபடுவது கடினமாக இருக்கிறது எனவே கட்டுபாடு ரொம்ப முக்கியம் என முன்னவர்கள் சொல்வது இதுக்காகத்தான். எனவே தப்புகள் முதல் தடவை செய்யும் போதே தடுத்து விடுங்கள் பழகியபின் ஆழ்மனதை வெல்வது சாத்தியமில்லை என்று சொல்லிவிட முடியாது மிக கடினம்.
சில காதலர்களை பார்த்திருப்போம் அதில் ஒருவர் மிக அழகாக இருப்பார் மற்றவர் அசிங்கமாக இருப்பார் அவர்களுக்குள் அது பெரிய விடயமாக இருக்காது பார்க்கும் எங்களுக்கு வியப்பாக இருக்கும். ஆனால் இங்கு நடப்பது என்ன அவர்கள் பழகும் போது அவர்களுக்குள் காதல் இருந்திருக்காது ஆனால் அவர்கள் சில காலம் பழகும் போது அவர் ஆழ்மனதில் மற்றவர் பதிந்துவிடுவார் அதன் பின் விலகுவது கடினமாக இருக்கும். இவர்களை கேட்டால் அவரை விரும்புவதற்கு காரணம் சொல்ல முடியாமல் இருக்கும் சொல்லவேண்டும் என்பதுக்காக சில காரணங்களை சொல்லலாம் ஆனால் உண்மை ஆழ்மனம் தான். ஆனால் இவர்களால் மற்றவரை விட்டு விலகமுடியாமல் இருப்பதுதான் காரணம். நண்பர்களே உங்களுக்கு ஒருவர் மீது காதலா? முதலில் அவர்கள் ஆழ்மனதில் பதியும் வரை நன்றாக பழகுங்கள் நல்லவிதத்தில் பதியவேண்டுமாயின் அவர்கள் மனம் விரும்பும் விதத்தில் பழகி ஆழ்மனதில் உங்களை பதியவையுங்கள். அதன் பின் அவர்கள் உங்களை விட்டு பிரிய நினைக்கும் போது அவர்கள் உங்களை உணர்வார்கள்.
எங்களை போல பசங்களை பார்த்த உடனே பிடிக்காது பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்........
எங்களை போல பசங்களை பார்த்த உடனே பிடிக்காது பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்........
தொடரும்..
மீண்டும் தலைவர் பிரபாகரன் (நன்றி மறந்த தமிழர்கள்....!!!)
நேற்று இரவு ஏனோ மனது சிறிது பாரமாக இருப்பதை உணர்ந்தேன் அதை திசை திருப்ப வழமை போல வலைபூக்களை துலாவிகொண்டிருந்தேன் அப்போது நண்பர் சஞ்சயன் தனது பயண அனுபவங்களை பகிர்ந்திருந்தார் அவற்றை பார்க்க நேர்ந்தது எனது மன கவலை வறண்ட நிலத்தில் விழுந்த மழைத்துளிபோல மறைந்து போனது காரணம் அவர் எழுத்துக்களில் என் மனதில் சுனாமியே அடித்திருந்தது.
விடுமுறைக்கு ஊருக்கு வருபவர்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன் அவர்கள் எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் வேறுவிதமாக இருக்கும் இப்படியானவர்கள் மத்தியில் இவரின் தேடல் எங்கள் மக்களுக்கு நல்லதொரு பாடம். எங்களுக்காக போராடியவர்கள் இப்போது இருக்கும் நிலைமை என்ன,நாங்கள் எதை பற்றி கவலை பட்டுக்கொண்டு இருக்கிறோம் என்பதையும் எங்கள் குறுகியமனப்பாங்கையும் எங்கள் சுயநல மனதுக்கு புரிய வைத்திருக்கிறது இவரின் இந்த அனுபவ பகிர்வு. இவரின் இந்த தேடல் இவருக்கு தெரிந்த ஒரு சிலருக்கு தெரிந்தவர்களிடம் இருந்து அறிந்துகொண்டது அதிலும் சிலவற்றைத்தான் அவர் பகிர்ந்திருப்பார் அப்படியானால் இதுபோன்ற இன்னும் எத்தனை பேர் இழப்புகளை தாங்கிக்கொண்டு வாழ்கையை இறுதிவரை போராட்டமாக சுமக்க போகிறார்கள் ஈழ போராட்டத்துக்காக பங்களிப்பு செய்ததுக்கு????
ஈழ போராட்டம் கசப்பான அனுபவத்தில் முடிந்ததில் இருந்து எங்கள் எதிர் பார்ப்புகள் என்னவாக இருந்தது. இனி ஈழம் கிடைக்காதா என்ற கவலை மனம் முழுவதும் பரவி ஒருவித மன நோயாளர்கள் போல எங்களை மாற்றியது உண்மை அதன் விளைவால் தலைவர் மீண்டும் வருவார் மீண்டும் ஈழ போராட்டம் தொடரும் என்ற நம்பிக்கையை நாமே உருவாக்கி அந்த கனவில் எங்கள் மனநோய்க்கு மருந்தாக்கி கொண்டோம். அது மட்டுமல்ல இந்த பின்னடைவை தாங்கி கொள்ள முடியாமல் எங்கும் தமிழ் பற்றை புகுத்த முனைந்தோம் தமிழ் நடிகர்கள் இலங்கைக்கு சென்றால் அவரின் படங்கள் தடை செய்வோம், ஒரு தமிழன் ஆங்கிலத்தில் தமிழ் படங்களில் பாடல் எழுதினால் கொதித்தெழுவது இதுபோன்ற நியாயமற்ற காரணங்களை தூக்கி பிடித்து எங்கள் மன வேதனையை திசை திருப்ப முயன்றோம் . மக்களின் மனதினை நன்கு புரிந்துகொண்ட அரசியல் வாதிகள் சினிமாக்காரர்கள் என எல்லோரும் எங்கெங்கு ஈழம் பற்று பற்றி பேச முடியுமோ அங்கெல்லாம் பேசி அவர்களை உயர்த்திகொண்டார்கள்.ஆனால் எதை நாங்கள் நினைத்திருக்க வேண்டுமோ அதை மறந்துவிட்டோம்.
எங்களுக்காக நாங்கள் சொகுசாக இங்கு வாழ களத்தில் போராடி இன்று ....
நண்பர் சஞ்சயனின் அனுபவ பகிர்வில் இருந்து ...http://visaran.blogspot.com/2012/08/blog-post_19.html
"ஆனால் விதிவசமாய் நான் சந்தித்த, புனர்வாழ்வு பெற்ற ஒரு சில முன்னாள் போராளிகளிகள் மற்றும் மனிதர்களின் சோகம் என்னை கடந்த சில நாட்களாக ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது.
நண்பர் சஞ்சயனின் அனுபவ பகிர்வில் இருந்து ...http://visaran.blogspot.com/2012/08/blog-post_19.html
"ஆனால் விதிவசமாய் நான் சந்தித்த, புனர்வாழ்வு பெற்ற ஒரு சில முன்னாள் போராளிகளிகள் மற்றும் மனிதர்களின் சோகம் என்னை கடந்த சில நாட்களாக ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது.
- விபச்சாரம் செய்யும் முன்னாள் பெண்போராளிகள்,
- ஏழ்மையினால் குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவு வழங்கமுடியாது முகாம்களில் தவிக்கும் முதுகெலும்பு பாதிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளி,
- தொடைக்கு மேற் பகுதியுடனேயே காலை இழந்து மனைவிகுழந்தைகளை காப்பாற்றுவதற்காக வீதியோரத்தில் சுண்டல் விற்கும் முன்னாள் போராளி,
- திருமணமாகி பத்தே மாதத்தில் கடல் மோதலொன்றில் காணாதுபோன கேர்ணல் தரத்திலான தனது கணவன் இன்னும் உயிருடன் இருப்பார் என்னும் நம்பிக்கையுடன் தனது 4 வயதுப் பெண்குழந்தையுடன், வாழ்வாதாரம் இன்றி தம்பி தங்கையுடன் முகாமில் தவிக்கும் முன்னாள் பெண் போராளி்,
- இரு கைகளையும் தோள்மூட்டு்ன் இழந்த தனது முன்னாள் போராளியான மகனை பராமரிக்கும் வயதான தந்தை,
- இருகண்களையும் இழந்த முன்னாள் போராளி,
- குழந்தைப்போராளியாய் இயக்கத்தில் இணைக்கப்பட்டு இறுதிப் போரில் பெற்றோர் சகோதரர்களை இழந்த முன்னாள் போராளி"
எனக்கு ஒன்றுதான் புரியவில்லை முகபுத்தகதை திறந்தால் ஈழம் பற்றி தினமும் பல ஆயிரம் பகிர்வுகள் எங்கும் ஈழம் சம்பந்தமான குழுக்கள், தமிழகத்தில் எந்த அரசியல்வாதியை பார்த்தாலும் ஈழத்துக்காகவே பிறந்தவர்கள் போல பேட்டிகள் மேடை பேச்சுக்கள் அப்படி இருக்க ஒரு இடத்திலும் இதுபோன்ற உண்மை பதிவுகளை, பேச்சுக்களை இவற்றை நிவர்த்தி செய்ய எதாவது திட்டமிடல் முயற்சி நான் பார்த்ததில்லை சுய விளம்பரத்துக்கான விடயமாக போய்விட்டது ஈழம்..
புலம்பெயர்ந்த தேசத்தில் ஈழ தமிழர்கள் எத்தனை இலட்சம் இருக்கிறார்கள் அவர்களில் எத்தனைபேர் பணங்களில் புரள்கிறார்கள் அவர்களுக்கு குடியுரிமை வாங்கித்தந்த போராட்டத்தில் பங்கேற்று இன்று ஒரு வேளை உணவுக்காக அங்கங்களை இழந்து ,விபச்சாரம் செய்து வாழ்வை போராட்டமாக மாற்றிகொண்டிருக்கும் இந்த முன்னாள் போராளிகளில் ஒவ்வொருத்தருக்கு ஒரு புலம் பெயர்ந்த குடும்பம் உதவி செய்தாலே தாரளமாக போதுமானது... இது எங்களின் கடமையும் கூட ... ஆனால் நாங்கள் அன்று புலிகள் பெற்ற வெற்றி பெருமைகளையும், ஈழ வரலாறுகளையும், மீண்டும் தலைவர் வருவார் , போராட்டம் மீண்டும் மலரவேண்டும் போன்ற விடயங்களை பற்றி பேசுவதால், சிங்களவர்களையும், அவர்களோடு நட்புறவை பேணுபவர்களையும் வன் சொற்களால் எசுவதாலும் எங்களை ஈழ ஆதரவாளர்கள் என நாங்களே நினைத்து பெருமையடைந்துகொண்டிருக்கிறோம்.
எங்களுக்காக இரத்தம் சிந்தி, உயிரை விதையாக்கி வாழ்ந்தவர்கள், அவர்கள் குடும்பங்கள் பற்றி சிறிது சிந்தியுங்கள் நாங்கள் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு காரணம் யார்? எங்களுக்காக போராடி இன்று ஒரு வேளை உணவுக்காக விபச்சாரம் செய்யும் அளவுக்கு முன்னாள் போராளிகள் செல்லுமளவுக்கு நாங்கள் எங்கள் சுயநலம் இருக்கிறது என்றால் நாங்களனைவரும் உயிருள்ள சுயநலப்பிணங்கள்..
நண்பர் சஞ்சயனின் பயண அனுபவங்கள் இனித்தான் விரிவாக பதிவாகும்... இன்னும் பல உண்மைகளுடன் .....!!!
இணைந்திருங்கள் அறிய விரும்புபவர்கள்.http://visaran.blogspot.com/
நண்பர் சஞ்சயனின் பயண அனுபவங்கள் இனித்தான் விரிவாக பதிவாகும்... இன்னும் பல உண்மைகளுடன் .....!!!
இணைந்திருங்கள் அறிய விரும்புபவர்கள்.http://visaran.blogspot.com/
உண்மை காதலின் குழந்தை...!!!
ஏறி வந்த வாழ்க்கை படிகட்டுகளில்
ரசித்து புரிந்தவை சில
புரியாமல் கடந்து வந்தவை பல
ஒரு புதிர்-விடை தேடி
ஓடி முடிவதற்குள்
அடுத்தடுத்த கேள்விகள்
வாழ்கையின் அர்தத்தை
சிந்திக்க நேரமற்று
ஓட்டம் மட்டும் முடிவாக
இதயவோட்டம் நிக்கும்வரை...!!!
ஆயிரம் ஆசைகள்
வந்து போயின
அதில் அடைந்தது என்ன
இழந்தது என்ன
அர்த்தமற்ற சிந்தனை மட்டும்தான்
நிரந்தரமாக ஆரம்பித்த இடத்திலேயே
விடைகள் மட்டும் சூன்யமாக ...!!!
கடந்து வந்த காலத்தில்
சூழ்ந்துகொண்ட பிரச்சனைகளில்
ஓடி ஒளிந்ததனால்
கிடைதவையெல்லாம் அனுபவம்
என்ற வீராப்பில்
உன் வயது என் அனுபவம் என்று
அடுத்தவர்களிடம் வாய்சுனாமி
அடித்தவரெல்லாம்
வாழ்க்கையை முகம் கொடுக்கமுடியாமல்
மூச்சு முட்டி மூழ்கி இறந்தவர்களே
பிணங்கள் மட்டும் பேசிக்கொண்டு திரிகிறது...!!!
வயதல்ல அனுபவம்
முகம் கொடுத்து முன்னின்று
முயற்சி செய்ததில்
கிடைத்த தோல்விகள்-அறிவுகள்
அதன்பால் கொண்ட
வெற்றிகள் தான் அனுபவம் ...!!!
நெற்றிகாசை எதிர்பார்த்து
எரியாமல் காத்திருக்கும் பிணம் வரை
பணத்தின் மேல் கொண்ட மோகம் தீருவதில்லை...!!!
மனங்களை நோகடித்தேனும்
பணங்களை அடையலாம் தவறில்லை
பணங்களை இழந்து மனங்களை ஜெயிப்பதில்
உடன்பாடில்லா புதுமை விதிகள்
மனிதத்தை வளர்ப்பதற்காக என்று
நமக்குள் சொல்லிகொள்கிறோம் ...!!!
பருவத்தில் வரும் காதல் போல்
ஈர்பில் வருவது இவையெல்லாம்
உண்மை காதல் மலர்ந்து
அவர்கள் குழந்தை பிரசவிக்கும்வரை
உண்மைபோல் தோன்றும் இவையனைத்தும்
பொய்யாக்கும் பிறந்த குழந்தை...!!!
எதுதான் உண்மை காதல்
மண்ணுக்கு எங்கள் மேல் இருக்கும் காதல்
அவர்கள் குழந்தைதான் எது
கல்லறை.
தமிழ்மணம் மகுடம்... அதிக வாசகர்கள் பரிந்துரை
இன்று மிகவும் சந்தோசமாக இருக்கிறது மனது..நண்பன் ஒரு வலை பூ வைத்திருக்கிறான் நானும் உருவாகினால் பெருமை என கருத்தி உருவாக்கிய வலைப்பூவில் மற்றவர்கள் பதிவுகளை போட்டு மகிழ்ச்சியடைந்த நான் படிப்படியாக சொந்தமாக எழுத ஆரம்பித்தேன் எனது பதிவுகளையும் சிலர் பார்வையிடுவதையும் கருத்து தெரிவிப்பதையும் பார்த்து சந்தோசமடைந்த எனக்கு இன்று தமிழ்மணம் மகுடம் என்ற தலைப்பின் கீழ்
தமிழ்மணம் மகுடம்
கடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை
எனது பதிவு இருப்பதை கண்டு மனம் காற்றில் சருகாகி பறந்து திரிகிறது.... என்னாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்த பரிந்துரையாளர்களுக்கு எனது நன்றிகளை உங்கள் பாதத்தில் சமர்பிக்கிறேன்..
வல்லரசாகத்துடிக்கும் கேவல அரசே நல்லரசாக முயற்சி ...!!!
வல்லரசாகத்துடிக்கும்
கேவல அரசே
நல்லரசாக முயற்சி
பசித்த வயிறுகள்
அநாதரவாக எரிந்து கிடக்க
வீதியில் மிருகங்கள் போல்
வாழ்க்கை நடத்த
சுகாதாரம் இன்றி
மழலைகள் மலராமலே கருக
உனக்கு எதுக்காக
அணுகுண்டுகள்
அடுத்த நாட்டின் பொல்லாப்புகள்
அவர்கள் அழிவில் சந்தோசங்கள்
மனிதன்
வல்லவனாக பார்கிறான்
நல்லவனாக முனைவதில்லை
நாடுகள்
வல்லரசாக பார்கின்றன
நல்லரசாக நினைப்பதேயில்லை
நாங்கள் எதை நோக்கி
சென்றுகொண்டிருக்கிறோம்
எதை விதைத்துவிட்டு
போகபோகிறோம்
நாளைய சமூகத்துக்கு
எங்கள் வாரிசுகளுக்கு
எப்படி அழிப்பது என்பதையா?
அழிக்க முடிந்தவன்தான்
திறமையானவன் என்பதையா?
ஏழ்மையை ஒழிக்கும் வரை
உழைப்பவன் உயரும் வரை
வலியவர் மெலியவரை
ஒடுக்குவதை நிறுத்தும் வரை
எந்த நாடும் நல்லரசாக முடியாது
நல்லரசில்லாத எவ்வரசு
வல்லரசு?
பணத்தாசை அழித்த எனது வாழ்க்கை.........
கருமேகங்களுக்கு பொருத்தம் பார்த்தது யாரோ அவர்கள் சந்திக்கும் போதெல்லாம் அழுவது தவறாமல் நடந்துகொண்டே இருக்கிறது ... யதார்த்த உலகில் அடுத்தவர்கள் அழுவது மற்றவர்களுக்கு இப்போதெல்லாம் சந்தோசம்தானே... அதுபோலவே அந்த மேகங்கள் அழுவதை என் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் மரமும் சந்தோசமாக இலையசைத்து ரசிப்பதை என் வீடடு யன்னலூடாக நான் ரசித்துகொண்டிருந்தேன் ... அப்போதுதான் ஒரு முதியவர் அந்த மழையில் நனைந்துகொண்டே சென்று கொண்டிருந்தார் அவரை பார்த்துக்கொண்டே இருந்த போதுதான் சில வருடங்களுக்கு முன்பு கொழும்பில் நடந்த ஒரு நிகழ்வு மனகண்ணில் நிழலாடியது அதை உங்களுடன் பகிர வேண்டும் என்று நான் விரும்பியதுக்கு காரணமும் உண்டு அன்று அந்த சம்பவம் வாழ்க்கை பற்றி எனக்கும் பல விடயங்களை இன்றுவரை பதித்து நிற்பதுதான்......
மலேசியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த
விமானத்தில் எனது இருக்கைக்கு முன்னாள் இருந்த ஒருவரை
சந்தித்தேன் இன்றுவரை நாங்கள் நல்ல நண்பர்கள் இப்படி ஒரு உயர்ந்த நட்பினை
பார்த்திருக்கிறீர்களா கிட்டதட்ட 3000 அடி உயரத்தில் இருந்து ஆரம்பித்த நட்பு மிக உயர்ந்த நட்பு.......
அப்போது எனது வேலை
கணணி திருத்தி கொடுப்பது விற்பனை செய்வது இடையிடையே மலேசியா, சிங்கபூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து கணணி, தொலைபேசி, உதிரி பாகங்கள், ஆண்களின்
உடைகள் என
கொடுக்கப்படும் பட்டியல்களுக்கேற்ப பொருட்களை கொண்டுசென்று இலங்கையில் விற்பனை
செய்வது ,இப்படியான நேரத்தில் தான் எனது உயர்ந்த நண்பன்
எனக்கு தொலைபேசியில் சொன்னான் ஒரு முகவரியையும் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அந்த
வீட்டில் ஒரு பெரியவர் இருக்கிறார் அவருடைய கணணி வேலை செய்யவில்லை செய்து
கொடுக்கும் படி .........அவன் அப்போது லண்டனில் இருந்தான் இப்போதும்......
நானும் அந்த
முகவரியை நாடி அந்த பெரியவரின் கணணியை சரி செய்து கொடுத்தேன் ஒரு மணிநேரம்
ஆகிவிட்டது அதை செய்து முடிப்பதுக்கு.
நானும் அய்யா
இப்போது சரியாகிவிட்டது நான் போயிட்டு வருகிறேன் என சொல்லிக்கொண்டு நாற்காலியை
விட்டு எழும்பும் போது எனது கையில் 2000 ரூபாய் பணத்தை கொண்டுவந்து திணித்தார். நானும் அய்யா நான் நண்பனுக்காகத்தான்
இங்கு வந்தேன் பணம் வேண்டாம் என பணத்தை கணணி அருகில்
வைத்துவிட்டு போவதுக்கு ஆயத்தமாகும் போது சொன்னார் என்னை மீண்டும் பழைய மாதிரி
ஆக்கி கவலைபட வைத்துவிடாத தம்பி இந்த காசை எடு என்றார்...
இப்போது எனது
ஆர்வம் அவரது வார்த்தைக்குள் ஒளிந்திருந்த பழைய மாதிரி என்ற சொற்களுக்குள் மறைத்து
நிக்கும் கருத்துமேல் ஆவலை தூண்டியது. அது என்ன அய்யா பழைய மாதிரி என்றேன்?
அது ஒரு பெரிய கதை
தம்பி என்னுடைய சோக கதை என்றார்... அவர் அப்படி சொல்லும் போதே அவர் கண்களில் அவர்
தனிமையின் வேதனையை நான் உணர்ந்தேன். ஏதோ ஒன்றை சொல்ல விரும்புகிறார் ஆனால்
என்னிடம் சொன்னால் நான் அதை காது கொடுத்து கேட்பேனா,கேட்க விரும்புவேனா
என்பதுதான் இப்போதைக்கு
அவரது சொற்களிலும் அவர் உடல் பாவத்திலும் உணர்த்தி நின்றது..
உங்கள் கதையை
கேட்காமல் இன்று நான் இங்கிருந்து போக போவது இல்லை என சொல்லிக்கொண்டே நாற்காலியில்
அமர்ந்தேன் ...
அப்போது அவர்
சிரித்துக்கொண்டே அது ஒருவித வெட்கமும் கூட கலந்திருந்தது போடா தம்பி என மீண்டும்
சொல்ல விரும்பாதது போல ...
நானும் விடவில்லை கடைசியில்
சொல்ல ஆரம்பித்தார்..
நான் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவன் அப்பா சிறு வயதிலேயே
இறந்துவிட்டார் இடியப்பம் விற்பது , அரிசி இடித்து கொடுப்பது,மிளகாய் தூள் இடித்து கொடுப்பது,இப்படியாகத்தான் நானும் எனது
தம்பிகள் இருவரும் வளர்க்க பட்டோம், எனக்கு படிப்பு சரியாக மண்டையில் ஏறவில்லை
அதனால் 14 வயதிலேயே கொழும்பில் வேலை
பார்த்துகொண்டிருந்த பெரியப்பாவில் கடைக்கு வேலைக்கு வந்துவிட்டேன். அதன் பின்
மிகவும் சிரமபட்டு அப்படி இப்படியாக நானும் வளர்ந்து ஒரு சிறு கடை போட்டு
முதலாளியானேன் அப்படியே பணம் மீது எனக்கு வெறி என்றே சொல்லவேண்டும் அதை
சேர்பதிலேயே எனது வாழ்கையை அற்பணித்தேன் அப்படியே எனது கடை பெரிதாகியது நானும்
பணங்களில் புரள ஆரம்பித்தேன் அப்போதும் எனக்கு பணம் மீது ஆசை போகவில்லை என்னை
எப்படி முந்திய காலத்தில் முதலாளிகள் வதைத்தார்களோ அது போலவே நானும் பலரது உழைப்பை
சுரண்டி எனது மூலதனமாக்கி கொண்டேன் . எப்போதும் கடையிலேயே காலத்தை கடத்தினேன்
இப்படியாக எனது உடல் பருமனும் எனது பணம் போல பெருகி கொண்டே போனது எனக்கோ எதை
பற்றியும் கவலை இருக்கவில்லை பணம் இருந்தால் எல்லாமே வந்துவிடும் பணம்தான் எல்லாம்
என இருந்துவிட்டேன். எனக்கு ஆண்டவன் பிள்ளைகளையும் கொடுக்கவில்லை, மனைவியும் வேளைக்கே கூப்பிட்டுடான்.என்
பொண்டாட்டியை ஒரு மனுசி மாதிரியே நடத்தல்ல.அதை நினைத்து வருந்தாத நாளே இன்று
இல்லை. நான் ஆசை பட்டது போல பணம் என்கூடவே இருந்தது சந்தோசம்.......? கண்களை கசக்கிகொண்டார்.
அன்று
விதைத்தவற்றை இன்று அறுவடை செய்துகொண்டு இருக்கிறேன் எனது உடலில் எல்லா
வியாதிகளும் இருக்கிறது விரும்பிய எந்த உணவையும் உண்ண முடியாது உண்ணும் உணவும்
செமிப்பது பெரிய கலவரமாக இருக்கிறது குடல்புண்ணினால். அன்று அநியாயமாக சம்பாதித்து
விரும்பிய உணவை உன்னது சேர்த்து வைத்த பணத்தை இன்று மருந்திற்காக
அழித்துகொண்டிருக்கிறேன் நான் அன்று பணத்திற்காக மனிதர்களை பகைத்துகொண்டேனே தவிர
மனிதர்களை, நல்ல நண்பர்களை சம்பாதிக்கவில்லை அதனால் இன்று
தனிமையில் இருக்கிறேன். பணத்தினால் வியாதிகளை குனபடுத்தவும் முடியவில்லை, தனிமையை போக்கவும் முடியவில்லை. இது எனக்கு
கொடுக்கபட்ட தண்டனையாக அனுபவித்துகொண்டிருக்கிறேன். அன்று வாழ்க்கை என்றால் என்ன? சந்தோசம், நிம்மதி என்றால் என்ன? என்று தெரியாமல் பணம் பின்னால் போகும் போதும் வாழ்கையை
அனுபவிக்கவில்லை. இன்று எல்லாவற்றையும் புரிந்துகொண்ட போது என்னால் முடியவில்லை. தனிமை, வியாதி நான் சம்பாதித்தது.மொத்தத்தில் வாழ்கையை
நான் வாழவில்லை பணம் அழித்துவிட்டது இல்லை இல்லை என் பணத்தாசை அழித்துவிட்டது
என்று சொல்லலாம் என்றார்.
அன்று
ஒவ்வொருநாளும் சில நிமிடங்கள் உடற் பயிற்சி செய்திருந்தால், எனது பணத்தினை மற்றவர்கள் கஷ்டத்துக்கு பயன்
படுத்தி இருந்தால் இந்த தனிமை, வியாதி இரண்டும் இன்று இல்லாமல் இருந்திருக்கும் இப்போ புரிவது மரமண்டைக்கு
அப்போது புரியாமல் போய்விட்டது...
சரிடா தம்பி
போதும் நேரமாச்சு நீ போய்ட்டு வா என மேசைமேல் இருந்த பணத்தினை என் கையில் மீண்டும் திணித்தார் நானும்
மறுக்கவில்லை. அவரோடு இனி தொடர்ந்து பேசவேண்டும் என முடிவு செய்துகொண்டு அவரது
தொலைபேசி இலக்கத்தையும் சேமித்துக்கொண்டு அங்கிருந்து பலவிதமான சிந்தனைகளுடன்
புறபட்டேன்...
அவரை பின்பும் சில தடவை
சந்தித்தேன்.. அப்பப்ப தொலைபேசியில் பேசி அவரது தனிமையை இயன்றவரை போக்கினேன்..
ஆனால் இப்போது அவர் உயிருடன் இல்லை...
இப்படி ஒரு
அனுபவத்தை எப்படி மறக்க முடியும் சொல்லுங்கள்.....
உண்மைதான் இப்படியாக பணம் பணம் என எத்தனை பேர் வாழ்க்கை உண்மையான வாழ்கையை புரிந்துகொள்ளாமல் அழிந்து போய் இருக்கிறது, பணத்துக்குள் சந்தோசம், நிம்மதியை தேடி தொலைந்து போய் இருக்கிறது. பணத்தாசையால் மழலை சொல்லை கேட்காமல் ,பிஞ்சுகளை கொஞ்சாமல், மனைவி, பிள்ளைகளுடன் மனம் விட்டு பேச நேரமில்லாமல் வாழ்வதெல்லாம் ஒரு வாழ்வா? இப்படியெல்லாம் பணம் பலரது வாழ்கையை அழித்தது, அழித்துகொண்டிருக்கிறது,இனியும் அழிக்கும்.........
உண்மைதான் இப்படியாக பணம் பணம் என எத்தனை பேர் வாழ்க்கை உண்மையான வாழ்கையை புரிந்துகொள்ளாமல் அழிந்து போய் இருக்கிறது, பணத்துக்குள் சந்தோசம், நிம்மதியை தேடி தொலைந்து போய் இருக்கிறது. பணத்தாசையால் மழலை சொல்லை கேட்காமல் ,பிஞ்சுகளை கொஞ்சாமல், மனைவி, பிள்ளைகளுடன் மனம் விட்டு பேச நேரமில்லாமல் வாழ்வதெல்லாம் ஒரு வாழ்வா? இப்படியெல்லாம் பணம் பலரது வாழ்கையை அழித்தது, அழித்துகொண்டிருக்கிறது,இனியும் அழிக்கும்.........
வெள்ளம் கடந்தபின்
ஆணை கட்ட முடியாது.........
கண்கெட்ட பின்
சூரிய நமாச்காரம் பண்ண முடியாது......
வருமுன்
காப்போம்... இல்லை வாழ்கையை தொலைத்தபின் புலம்ப மட்டுமே முடியும்... மேலே அந்த
வயோதிபர் போல...
நீங்கள் முதலாளியா? உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுங்கள்....
மனிதத்தையும் மதியுங்கள்.
எல்லோரும் உங்கள்
உடலையும்,அன்பையும் எப்போதும் பேணுங்கள் அதுதான் நிரந்தர
சந்தோசம்,நிம்மதி.
நன்றி.
கமலை(குருவை) மிஞ்சிய அன்ட்ரியா .. படங்கள்,காணொளிகள்
இன்று இணையத்தை மட்டுமல்ல இளையவர்களை கிசுகிசுக்க வைக்கும் விடயம் அன்ட்ரியா அனிருத் .... இப்படியான விடயங்களுக்கு கொடுக்கபடும் முக்கியத்துவம் ஏனோ பல சமுதாய சீர்கேடுகளுக்கு கொடுப்பதில்லை. இது என்ன மனநிலை புரியவில்லை எனக்கு...படங்களில் சிலர் தங்கள் பெயர்களை போட்டு புகழ் தேட முயல்வது இன்னும் ........
இருவருடைய அந்தரங்கங்களை உணர்வுகளை இப்படி படம் பிடித்து ரசிப்பது சரியானதா? இருவருடைய விருப்பங்கள் சம்பந்த பட்ட விடயங்களை மற்றவர்கள் குறை சொல்வதுவும் அவர்களை கேவலமானவர்களாக சித்தரிப்பதுவும் சரியானதா?
அவர்கள் செய்தது தவறென்றால் அதை தேடு தேடி பார்க்க விரும்புவது????
அவர்கள் செய்தது தவறென்றால் அதை தேடு தேடி பார்க்க விரும்புவது????
இந்த விடயம் எனக்கு உண்மையில் தெரியாது எனது நண்பனை சந்திக்க சென்ற வேளை அவனுடைய நண்பன் என்னோடு அறிமுகமாகினான்.நண்பனின் வீட்டருகில் கடல் இருப்பதால் அப்படியே பேசி பேசி கடற்கரையில் அலைகளின் இசைக்கு எங்கள் நடைகளை நடனமாக்கி நடக்க தொடங்கினோம் பல விடயங்களை பேசிக்கொண்டே போகும் போது இந்த விடயமும் வந்தது... அவன் இதை சொன்ன விதம் என்னை அப்படியே சுனாமி அடித்தது போல இருந்தது ... கமல் கமல்தான் என்றான் என்ன கொடுமை கமலுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம் என்று சிந்திப்பதுக்குள் சொல்லி முடித்தான் கமல் விஸ்வரூபத்தில் நல்லாத்தான் சொல்லி கொடுத்திருக்கிறார் என்றான்.
ஆனால் குருவை மிஞ்சி விட்டார் அன்ட்ரியா என்றான்..........எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுகிறான் பார்த்தீர்களா?
ஆனால் குருவை மிஞ்சி விட்டார் அன்ட்ரியா என்றான்..........எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுகிறான் பார்த்தீர்களா?
இதுவும் திறமைதான் ஆனால் அதை சரியான இடத்தில் பயன்படுத்தாத திறமை என்றே சொல்ல வேண்டும்.
நித்தியானந்தா விடயம் வேறு துறவறம் என்று சொல்லி சாமி என்று சொல்லி லீலைகள் செய்தவன்.. வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டியது... ஆனால் இது??????????? இப்படி ஊதி பெரிதாக்குவது சரியானதா?
நண்பர்களே தலைப்பை பார்த்து ஏதோ எதிர் பார்த்திருப்பீர்கள் .....
இலக்கணங்கள் மாறுது ...
அலையின் சத்தத்தை கொண்டு
ஆழ் சமுத்திரத்தினை அறிந்திடலாமோ
என் மௌனித்த உதட்டசைவால்
உள்ளத்தன்பை வெறுத்திடலாமோ ...
நிலவுக்குள் பூமியை புதைத்திடலாமோ
உன்னை நானும் மறந்திடலாமோ...
விசத்துளி பாலை விசமாக்குவது போல்
ஊடல் ஒன்று கூடல்களை மறந்திடலாமோ...
தி.மு.க போல மாநாடுகள் நடத்தி
நானும் போலிமுகங்கள் காட்டியிருந்தால்
என் அன்பு புரிந்திருக்குமோ ...
பணம் கொண்டு அளந்திடும் மானிடத்தை
மனம் கொண்டு அணைத்திட நினைத்தது
சினம் கொண்டு சிதைபடுவதற்காகவா ...!!!
Subscribe to:
Posts (Atom)