தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

விஜயின் நண்பன் படத்தை தடைசெய்வோம்!!!

பெரியாறு அணை பிரச்னைக்கு வாயை திறந்து அந்த மாநில வசூலை நிறுத்த விரும்பாத  டிகர்கள்!!! 
இவர்களும் தமிழை வைத்து ஆதாயம் தேடும் கருணாநிதி வம்சமே!!


பெரியாறு பிரச்சனையும் சினிமாவும், பலர் தங்கள் தங்கள் சொந்த கோபதாபாங்களுக்கும், உண்மை உணர்வுக்குமாய் ஒருவரை ஒருவர் குறை சொல்லி அவரவர் தப்பித்து கொள்கிறார்கள். இந்த நெருப்பில் பல காலமாக தமிழை வைத்து அரசியல் நடத்தும் அரசியல் வாதிகள் பலர் குளிர் காய்கிறார்கள். அதை மக்கள் வழமை போல உணர்வு என்று நம்பி தங்கள்  வெறியை  வெளிபடுத்தி அவர்கள் தூண்டிலில் இலகுவாக சிக்கிகொள்கிறார்கள்.

இதில் என்ன கொடுமையான விடயம் என்றால் நேற்று முன்தினம் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான் போலான நடிகர் விஜய் சில காலமாக தந்தையின் அரசியல் ஆசையால் பந்தாடபடுவதுதான். நடிகர் ரஜனி போல வர வேண்டும் என்ற ஆசை ஒரு பக்கம், அரசியலில் எம்.ஜி.ஆர் போல வரவேண்டும் என்ற ஆசை இன்னொரு பக்கம் இப்படியான ஆசைகளினால் சில காலமாக தோல்வி படங்களை கொடுத்து வந்தார் இரு படம் வெற்றி பெற்றதும் மீண்டும் தந்தையின் சதுரங்க ஆட்டத்துக்கு பகடை காயகினார்.  அன்னா ஹசாரே வின் லஞ்ச ஒழிப்புக்கு விமானாம் ஏறி சென்று வாழ்த்து தெரிவித்து வந்தார். 

எல்லா விடயங்களுக்கும் முந்திரிகொட்டை போல முந்திகொள்ளும் நடிகர் சங்கம் எதுக்காக அமைதி காக்கிறது மற்ற மாநிலங்களில் நடிகர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளும் போது எதுக்காக பின்னுக்கு நிக்கிறார்கள்? ரஜனிகாந்த் கூட  அன்னா ஹசாரே வின் உண்ணாவிரதத்துக்கு மண்டபத்தை இலவசமாக வழங்கி அதரவு தெரிவித்து மக்கள் மீதும் நாட்டின் மீதும் அக்காரை உள்ளவர்கள் என்று வழமை போல குரல் கொடுத்தார் எதுக்காக பெரியாறு ஆணை பிரச்னைக்கு எதுவும்பேச வில்லை.........?????

பணம்! பணம்! பணம்! "பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் " இதுதான் இவர்கள் உண்மையான அக்கறை இதுக்காகத்தான் இவர்கள் உணர்வு. ஆனால் இப்போது வந்திருக்கும் பிரச்சனையால் வாயை திறந்தாள் அந்த மாநிலங்களில் இவர்களில் படங்களுக்கு தடை போடபட்டால் இவர்கள் வசூல் குறையும் இதுதான் இவர்கள் வாயை அடைக்கிறது வேறு எதுவும் இல்லை.

இவர்கள் வருமானத்தை தடை செய்யாத இவர்கள் செல்வாக்கை உயர்த்தும் எந்த பிரச்சனைக்கும் இவர்கள் மூக்கை நுழைப்பார்கள் வீரம் பேசுவார்கள்.

முடிந்தால் விஜயின் நண்பன் படத்தை தடை செய்வோம் என்று ஒரு அறிக்கை விட்டு பாருங்கள் முதல் ஆளாக நடிகர் விஜய் பெரியாறு அணை பிரச்னைக்கு எதிர்ப்பறிக்கை விடுவார் அனல் பறக்க "பஞ்ச" வசனங்களும் வந்தாலும் வியப்பதுக்கு இல்லை.

சினிமாவை விட இப்போதெல்லாம் நடிகர்கள் நிஜத்தில் தான் அதிகம் நடிக்கிறார்கள்.

நடிகர் ரஜனிகாந்த் முதல் மகளுக்கு நூறு கோடி சீதனம் கொடுத்தார், இரண்டாவது மகளுக்கு................?தமிழ் நாட்டில்  இருக்கும் அவரின் உயிரிலும் மேலானா ரசிகர்களுக்கு ஒரு 10 கோடி கொடுக்க சொல்லுங்கள் பார்க்கலாம். ரஜனி உடல் நலம் சரி இல்லமால் இருக்கும் போது வெளியிட்ட அறிக்கையில் தமிழ் நாட்டு ரசிகர்கள் என்மீது இவ்வளவு அன்பு வைத்து இருகிறார்களா? அவர்களுக்கு எதாவது செய்வேன் என்றார். இப்படி வாய் திறக்கமால் இருப்பதுதானா? சுடலை ஞானம் வீடு வந்ததும் போயே போச்சு!

சும்மா சொல்ல கூடாது நல்லாவே நடிக்கிறாங்கப்பா!!!

5 comments:

  1. Acting and earning money is their job. They are doing it. They don t claim that they are public servants. The politicians elected by us and the officers who earn salary from our tax are doing none for the welfare of the land. First let us raise our voice against them and act on it.

    ReplyDelete
  2. ////சினிமாவை விட இப்போதெல்லாம் நடிகர்கள் நிஜத்தில் தான் அதிகம் நடிக்கிறார்கள்.////

    நீங்கள் சொன்னவற்றில் பல உண்மை இருக்கிறது... ஆனால் இதை எந்தளவுக்கு ஏற்றுக் கொள்வார்கள் என்பது தெரியவில்லை...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    கல்விக்காய் ஏங்கும் பயிருக்கு கரம் கொடுக்க வாருங்கள்

    ReplyDelete