களவாடப்படும் கடவுள்கள்.
பணத்தை பறிகொடுத்த வழிப்போக்கன்
நள்ளிரவில் கோவிலுக்கு வந்தான்.
கோவில் பூட்டபட்டிருந்தது..
கடவுளையும் அவர் நகைகளையும் காப்பாற்ற..
சிலைகள் திருடபடுகின்றன
கடவுள் நகைகள் கொள்ளை போகின்றன.
பக்தன் தன் உடமையை காப்பாற்ற
உண்டியலில் பணம் போடுகின்றான்...
இப்படியான உலகில்
கல்லுக்கு ஊற்றும் பாலும்
சினிமா நடிகன் படத்துக்கு ஊற்றும் பாலும்
பசித்த வயிற்றுக்கு செய்யும் துரோகமல்லவா??
காக்கை கூட கரைந்து கூடி உண்ணும்
மனிதா நீ மட்டும்??
ஏழையின் சிரிப்பில் இறைவனை தேடு.
மிகவும் அருமை
ReplyDelete