தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

உங்கள் முதலிரவு காணொளியை பலவருடங்கள் கடந்து நீங்களே பார்க்க நேரிட்டால்???



தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களின் வாழ்கையை மேம்படுத் தவே  ஆரம்ப காலத்தில் இருந்து வந்தது ஆனால் இன்று மனிதர்களுக்கு அச்சுறுத்தலாகவே அதிகம் காணபடுகிறது அதுக்கு இந்த சம்பவம் நல்ல உதாரணம்.எந்த ஒரு வளர்ச்சியையும் பயன் படுத்தும் விதத்தை பொறுத்தே அதன் வெற்றி அமைகிறது..

எனது நண்பனின் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் நடை பெற்றது நானும் சென்றிருந்தேன் திருமணம் மிக சிறப்பாக நடைபெற்றது பல பாடசாலை நண்பர்களை சந்திக்க கிடைத்ததால் சந்தோசத்துக்கு அளவே இல்லாமல் இருந்தது மீண்டும் பள்ளிக்கு  போன உணர்வு அது மட்டும் அல்லாமல் பல விதமான அனுபவங்களை ஒவ்வொருத்தரும் பகிர்ந்துகொண்டார்கள் அதில் ஒரு நண்பனின் மாமாவும் அதில் கலந்துகொண்டார் அவர் சொன்ன ஒரு சம்பவம் மிகவும் கவலை அடைய வைத்தது ...

திருமணம் முடிந்து தம்பதிகளை ஒரு ஹோட்டல் அறைக்கு அனுப்பி வைப்பதுக்காக தயாராகிக்கொண்டு இருக்கும் போது நண்பனின் மாமா அவசர அவசரமாக மாப்பிளையிடம் ஏதோ ரகசியம் சொல்லிகொண்டிருந்தார் அதன் பின் அவர்களை அனுப்பி வைத்துவிட்டு மாமாவிடம் கேட்டோம் என்ன ரகசியம் பேசிக்கொண்டு இருந்தீர்கள் என !!!
அவர் சொன்னது...

சில ஆண்டுகளுக்கு முன் அவர் துபாயில் வேலை செய்துகொண்டிருந்த காலத்தில் ஒருநாள் அவருடன் அறையில் தங்கி இருந்த நண்பர்கள் இருவர் பலான படம் பாற்பதுக்காக ஒரு கடையில் இருந்து ஒரு CD ஒன்றை எடுத்து வந்து போட்டார்களாம் அதிலும் கடைக்காரன் சொல்லி கொடுத்து இருக்கிறான் இது உண்மையாக நடந்ததை களவாக பிடிக்க பட்ட காணொளி என்று, காணொளியும் ஆரம்பமானது, ஒரு பெண் தனியாக அறையில் நின்று கொண்டிருந்தாள்  திடிரென அங்கு அறையில் இருந்த ஒருவர் அவசரமாக வந்து மின்சார இணைப்பை துண்டித்தாராம் காரணம் அந்த கானொளியில் இருந்த அந்த பெண் அவர் மனைவி.
 மிகவும் மனமுடைந்துபோனவரை அவர்கள் சமாதான படுத்தினார்களாம் பின் அந்த காணொளியை தனியாக எடுத்து சென்று கணனியில் போட்டு பார்த்து இருக்கிறார் அடுத்த அதிர்ச்சி அங்கு அவர் மனைவியுடன் இருந்தது அவர் தான்!!! அதுவும் அவர்கள் தேனிலவுக்காக தங்கி இருந்த அறையில் அவர்களுக்கு தெரியாமல் பிடிக்க பட்ட காணொளி......

என்ன நண்பர்களே புரிகிறதா எதுக்காக முதல் இரவுக்கு போகும் மாப்பிளைக்கு மாமா என்ன சொல்லி இருப்பார் என்று?? 

இப்படியான பிரச்சனைகளில் இப்போதெல்லாம் பல பெண்கள் தெரிந்தோ தெரியாமலோ சிக்கிகொள்கிறார்கள்  வாழ்கையையும் தொலைகிறார்கள், காதலிக்கும் போது காதலன் தானே எதிர் கால கணவன் தானே என்று நம்பியே பல பெண்கள் தங்கள் அரை நிர்வாண ,நிர்வாண படங்கள் எடுப்பதை அனுமதிகிறார்கள் பின் வழமை போல தோல்வியில் முடியும் கவர்ச்சி காதலில் பெண்ணின் நிம்மதி அந்த படங்களை நினைத்து அழிக்கபடுகிறது. இது இப்போது skype இல் அதிகமாக நடக்கிறது........

எதையும் வருமுன் காப்பதே மேல் முடிந்தபின் !!!!!!!!!!!!!!!!

வெள்ளம் வருமுன் அணை கட்டுவோம்.. 

No comments:

Post a Comment