வணக்கம் நண்பர்களே! நீண்ட நாட்களாக எந்த பதிவும் பதியவில்லை சில மாதங்கள் வழமை போல ஓடிப்போனது. எனது இந்த வலைப்பூவை எனது நண்பன் ஆரம்பிக்கிறான் என்பதுக்காக விளையாட்டாக ஆரம்பித்தேன் அப்போதெல்லாம் எனக்கு சரியாக தமிழ் தட்டச்சு கூட தெரியாது மற்றவர்களின் வலைபூவிலும் இணையத்தளங்களிலும் இருக்கும் செய்திகளை பிரதி செய்து போட்டுகொள்வேன் பலர் எனது பக்கத்தை பார்ப்பதை பார்த்து சந்தோஷபடுவேன் ஆனால் நாளாக நாளாக ஏதோ ஒரு உறுத்தல் என் மனதில் நானும் எழுதவேண்டும் என்ற ஆதங்கம் மனதில் விஸ்வரூபம் எடுத்து இருந்தது அதுக்கான சந்தர்ப்பத்தை இந்த வலை பூவை விளம்பர படுத்த ஒரு முகபுத்தக கணக்கை ஆரம்பித்தேன் அந்த கணக்கில் எழுத ஆரம்பித்தேன் சின்ன சின்னதாக ஆரம்பித்து இன்று நான் எழுதுபவற்றை பலர் விருப்பம் தெரிவித்தும் நன்றாக இருக்கிறது என்று சொல்ல சொல்ல என்னுள்,என்னாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கை வேரூண்டி விட்டது இந்த சந்தர்ப்பத்தில் இனி வலைபூவில் எனது அனுபவங்களை எண்ணங்களை பதியலாம் என நினைக்கிறேன் எனது எழுத்து திறமையை வளர்த்துக்கொள்ள இது இன்னும் உதவும், இணையம் என்னுள் இப்படியான மாற்றத்தை ஏற்ப்டுத்தி இருப்பது மிகவும் சந்தோசத்தைகொடுக்கிறது..
எனது இந்த முயற்சிக்கு உங்கள் ஆதரவை,கருத்தை சொல்லி என் வளர்ச்சிக்கு உங்கள் பங்களிப்பையும் எதிர்பாக்கிறேன்.
வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி தோழரே......
ReplyDelete