ஆசைகள் மிக சுலபமாக எங்கள் மனதை ஆட்கொள்கிறது அதனை அடைய முடியுமா இல்லையா என எதையும் ஆராயாமல் அது பாட்டுக்கு கனவு காண்கிறது எல்லாம் நிறைவேறிவிட்டதாக .... ஆசை இல்லை என்றாலும் வாழ்க்கை எதிர்பார்ப்பு இருக்காது உப்பில்லாத உணவு போலாகிவிடும். அளவுக்கு அதிகமானாலும் அதுவே வாழ்கையையும் அழித்துவிடும். எனவே இந்த ஆசையை எப்படி வகைபடுத்துவது எதை நோக்கி எங்கள் பயணத்தை ஆரம்பிக்கவேண்டும் என்று முடிவெடுப்பது மிக முக்கியம். சிந்திக்க தெரியாத ஆழ்மனம் ஆயிரம் சொல்லும் பின்விளைவுகளை சிந்திக்காது. எந்த ஒரு ஆசை யாரையும் பாதிக்காமல் தொந்தரவு செய்யாமல் எங்களுக்காக நிறைவேற்ற முடியுமோ அதை நிறைவேற்றுவதில் எந்த தவறும் இல்லை. அதுவே எங்கள் ஆசை நிறைவேறுவதில் இன்னொருவர் சுகந்திரம் பறிபோகிறது என்றால் அதை நிறுத்திவிடவேண்டும். தவறான ஆசை. அடுத்த படியாக எங்கள் ஆசையில் எங்களுக்கும் பயனிருந்து இன்னும் பலருக்கும் பயனாக இருந்தால் அந்த மாதிரியான ஆசைகள் எங்கள் இலட்சியங்களாகவே நாங்கள் கருதலாம்.
அறிவு மட்டும் இருந்தால் வெற்றியடைந்துவிடமுடியுமா? இந்த உலகத்தில் பல அறிவாளிகள் இருக்கிறார்கள் அவர்கள் எல்லோரும் வெற்றியாளர்களா? இல்லை அவர்களில் பலருக்கு விடாமுயற்சி, உழைப்பும் ,பொறுமை,நம்பிக்கை இருப்பதில்லை "புத்தியுள்ள மனிதன் எல்லாம் வெற்றி காண்பதில்லை" என்ற சந்திரபாபுவின் பாடல்கள் நினைவுக்கு வருகிறது இப்போதெல்லாம் பலர் ஏதோ அலுவலகம் சென்றோம் முடித்து வந்தோம் என்ற சாதாரண வாழ்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் இவர்கள் யாருக்கும் தொந்தரவில்லாதவர்கள் ஆனாலும் இவர்கள் முயற்சி என்பது புதிதாக ஒன்றும் இருந்துவிடபோவதில்லை இவர்கள் வாழ்வில் பாரிய வெற்றிகள் இருக்காது ஆனாலும் இவர்கள் அறிவாளிகள்தான் . இருக்கும் வாழ்க்கை போதும் என்று அதையே வாழ பழகிக்கொண்டவர்கள், இதில் குறை எதுவும் இல்லை. அறிவு மட்டும் வெற்றியை தந்துவிடாது.
இந்த முயற்சி எப்படி உருவாகிறது?
எனவே வெற்றிக்கு அறிவு,நம்பிக்கை,பொறுமை,முயற்சி,உழைப்பு எல்லாமே முக்கியமாகிறது..
இந்த கட்டுரை சம்பந்தமான எங்கோ வாசித்த ஒரு கருத்து நினைவுக்கு வருகிறது....
நூறு முறை முயற்சித்து ஒரு தடவை வெற்றியடைந்தேன் 99 தடவை தோல்வியில் இருந்து நூறு முறை வெற்றியடைவது எப்படி என்பதை அறிந்துகொண்டேன்.ஆயிரம் தடவை முயற்சி செய்யவேண்டும் என்பதுவே அது.
வெற்றி என்பது ஆசை பட்டதும் வந்துவிடுவதில்லை
எதுவும் செய்யாமல் வரவில்லை என்றதும் குறைகளை
வேறு இடங்களில் திணிப்பதால் எதுவும் நடக்க போவதில்லை.......
அனுபவங்கள் பல பாடங்களை கற்றுக் கொடுக்கும்...
ReplyDeleteநல்லதொரு பாடலின் வரியையும் முடிவில் சேர்த்துக் கொண்டது சிறப்பு... பாராட்டுக்கள்...
உங்கள் வருகைக்கும் அழகான கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி தோழரே..
Deleteஅருமையான கட்டுரை
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
Deleteவிடா முயற்சி நிச்சயம் நல்ல பலனை கொடுக்கும்.நல்ல பதிவு
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
Delete// வெற்றி என்பது ஆசை பட்டதும் வந்துவிடுவதில்லை எதுவும் செய்யாமல் வரவில்லை என்றதும் குறைகளை வேறு இடங்களில் திணிப்பதால் எதுவும் நடக்க போவதில்லை.......//
ReplyDeleteநல்ல வரிகள் .....
உங்கள் வருகைக்கும் அழகான கருத்துக்கும் நன்றி..
Delete