தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!
Showing posts with label இணையம். Show all posts
Showing posts with label இணையம். Show all posts

காமமயமாகி போன இணையம்


நண்பர்களே இன்று முகபுத்தகத்தில் படித்த தோழி ஒருவரின் கட்டுரை மிகவும் பிடித்து போனதால் இங்கு பிரசுரிக்கிறேன். ஒரு பெண் இப்படி எழுதியது வரவேற்க படவேண்டிய விடயம் ............


எழுதலாமா கூடாதா சிந்திக்கலாமா

எழுதலாமா வேண்டாமா? இன்றும் ஒரு பெண் இப்படி தான் இருக்க வேண்டும் அவரின் எழுத்துகளும்
இப்படி தான் இருக்கவேண்டும் என்று ஒரு சிலர் எதிர்பார்கிறார்கள்.

அதையே தான் சில பெண்களும் செய்கிறார்கள்.பெண்ணின் சுதந்திரம் அழகுசாதன பொருட்கள் பாவிப்பதும் அணியும்  ஆடையில் புரட்சி செய்வதுமே சுதந்திரம் என்கிறார்கள் பெண்கள்.. என்ன கொடுமை.மாதர் தனை இழிவு செய்யும் மாதர்கள் தான் இங்கே அதிகம் இருக்கிறார்கள்.இப்படி பட்டவர்களுக்கு மாறுபட்டு இருக்கவே நான் விரும்புகிறேன். அதனால் தான் என் எழுத்துகளும் மாறுபட்டே இருக்கிறது.

இரண்டு மாதங்களாக பாதி எழுதியும் மீதி எழுதாமலும் வைத்திருந்தேன். ஆனால் இன்று இதை எப்படியும் எழுதிடமுடிவு செய்து எழுதுகிறேன். தவறு என்று எண்ணுபவர்கள் படித்ததை மறந்துவிடுங்கள்.சரி என்பவர்கள் வாழ்த்து சொல்லுங்கள். ஆனால் யாரும் எனக்கு காதல் மன்னிக்கவும் காம மடல் அனுப்பாதிர்கள்.அப்புறம் உங்கள் பெயர் என் சுவரில் வந்துவிடும்.

சில இணையதளங்கள் தமிழ் இணைய ஊடகங்கள் மாற்றான் மனைவியை காமவெறியோடு பார்ப்பவர்கள் என்று எல்லோரையும்  கொஞ்சம் சாடலாம் என்று பார்கிறேன். அதிகம் இணையத்தை மேயும் பழக்கம் எனக்கு இல்லை என்றாலும் நாட்டு நடப்பை பற்றி தெரிந்து கொள்ள நான் இணையதளங்களில் மேய்வது உண்டு. இப்படி நான் தேடி படிக்க முயன்ற இணையங்களில் எல்லாம் அதிகம் கள்ளகாதல் பாலியல் பலத்தாகரம் சிறுவயது கற்பம் சினிமா காமக்கதைகள் என்று எல்லாமே காமத்தை சுற்றியே இருக்கிறது.லங்காஸ்ரீ இணையத்தை தவற்றி.

இவர்கள் இதனால் எதை சொல்லவருகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. கள்ளகாதல் என்பது இப்பொழுது சர்வசாதர்நாமாகிவிட்ட ஓன்று இதை ஒரு செய்தி ஆக்கி அதற்க்கு முக்கியத்துவம் தருகிறீர்களே இது முறையா? கள்ளகாதலை எதிர்க்கிறோம் என்று கூறி கொண்டு இங்கிலாந்து பெண்களில் பார்க்க இந்திய பெண்கள் தான் காமகளியாட்டங்களில் ஆசைகூடியவர்களாக இருக்கிறார்கள் என்று எழுதுகிறீர்கள். பெண்களுக்கு எந்தமாதிரி எல்லாம் காமாவிளையாட்டுக்கள் பிடித்திருக்கு என்று எழுதுகிறீர்கள். இது தான் நாட்டு நடப்பா. இவை தான் இணையஊடகங்களின் வேலையா? பத்தாதுக்கு இன்று யாழ்பாணம் முழுக்க முழுக்க காமத்திலே கட்டுண்டு இருப்பது போல் எழுதுகிறீர்கள். ஏன் முன்பு இப்படியில்லையா?

சரி இந்த கள்ளகாதல் செய்தியோடு குழந்தைகள் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாவதை பிரசுரித்து அதை ஒரு சர்வசாதரானமான விடையமாக படிக்கவைதுவ்டுகிறீர்கள் ´. இது சரியா. இணைய ஊடகத்துக்கு மட்டும் எப்படி அதிகம் காமக்கதைகள் கிடைகின்றன? ஊடகங்களின் வேலை என்ன வெறும் காமபிரச்சனைகளை மட்டுமே அலசுவதா?

குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தபடுவது என்றால் அது என்ன சர்வசாதாரணமான பிரச்சனயா`? ஊடகங்கள் என்னும் பெயரில் எதற்கு மக்களை சீர்குலைகின்றீர்கள்? இப்படி செய்திகளை பிரசுரித்து யாழ்பாணம் கெட்டுவிட்டது கெட்டுவிட்டது என்று எழுதுவதுக்கு பதில். பெண்ணின் அந்தரங்கக ஆசைகளை உணர்சிகளை எழுதுவதுக்கு பதில். இந்த மாதிரி கள்ளகாதலும் குழந்தைகள் பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாப்பது எப்படி  என்று எழுதலாமே? ஊடகங்களே உங்களுக்கு இருக்கும் போட்டியில் எதுக்கு இப்படி சமுகபிரசனைகளை  பொழுது போக்கு அம்சமாக ஆக்குகின்றீர்கள்?

இங்கே இந்த முகபுத்தகத்தில் பெண்விடுதலை தேடிதர்கிறோம் என்று கூறி கொண்டு. பெண்கள் மானம் காப்பம் என்று கூறிக்கொண்டு. பெண்கள் மதுபானம் பாவிப்பது அரைநிர்வாணமாக இருப்பது புகைப்பது போன்ற புகைப்படங்களை போடுகின்றீர்கள். இஸ்லாமியர்கள் பெண்களை அடிமைபடுத்துகிரார்கள் என்று இஸ்லாமிய பெண்களுக்கு ஆக குரல் கொடுக்கும் தமிழ் ஆண்கள் தமிழ் பெண்களை இழிவுபடுத்துகிறார்கள். கேட்டால் தமிழன் தமிழனுக்கு ஒரு கலாசாரம்.

கள்ளகாதல் கள்ளகாதல் என்று சொல்கிறீர்களே கள்ளகாதல் எதனால் உருவாகுது என்று சிந்தித்தது உண்டா நீங்கள்? எங்கள் தமிழினத்தில் தாலிகட்டிய கணவனிடம் கூட ஒரு பெண் அந்த காமாசைகளை வெளிபடுத்த கூடாதம். கேட்டால் அது அசிங்கம் வெக்கம். கணவனுக்கு மனைவியை  பற்றி சிந்தனையே இல்லை. தான் சுகம் கண்டால் போதும் அது தான். கனவிடம் சொல்லமுடியாத கேட்க்கமுடியாத விடையங்களை எல்லாம் மனைவி பக்கத்திவீட்டுகாரனிடமும் அவனிடமும் கூறி ஓடிவிடுகிறாள். பின்னால் ஐயோ தமிழன் மானம் போச்சே மறியாதே போச்சே யாழ்பாணம் அழிந்துவருதே என்று குரல் குடுக்கவேண்டியது.

பாவம் குழந்தைகள் அவர்கள் பாலியல் சித்திரவதைக்கு ஆளான பின் எவ்வளவு மனுளைச்சளுக்கு ஆளாகிறார்கள் தெரியுமா? இதை கொஞ்சம் என்றாலும் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் கூடஇல்லாமல் யாழ்பாணம் கெட்டுவிட்டது கலாசாரம் போய்விட்டது என்குறீர்கள். சிறுவயது கற்பம். இவற்றை தடுக்க குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை சொல்லிதாருங்கள். இது அவசியமான ஓன்று. வெறும் கற்பம் ஆகாமல் தடுக்க மட்டுமல்ல பாலியல் நோய்களிலும் இருந்து குழந்தைகளை காப்ற்ற வேண்டியகடமை உங்களிடம் உண்டு. சரியான முறையில் சொல்லி கொடுத்தால் தவறான தொடுதலை குழந்தை புரிந்து கொல்லுஇல்லையா? சொல்லி தெரிவது காமகலை இல்லை என்று கூறி கொண்டு. காதலில் விழுந்தேன் மயக்கம் என்ன போன்ற படங்களை குழந்தைகளை பார்க்க விடுங்கள். பெரியவர்கள் உங்களுக்கே சரியாக பாலியல் பற்றிவிளக்கமில்லையே . பின் குழந்தைகளிடம் மட்டும் எப்படி வரும். பிள்ளைகள் கட்டாயம் பாலியல் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். காமுகனிடம் இருந்தும் சிறுவயது கற்பம் பாலியல் நோய்களில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள தெரிந்திருக்க வேண்டும்.

தமிழ் ஆய்வாளர்களும் சமுகபிரபலங்களும் பாலியல் கல்வியை எதிர்கிறார்கள் கேட்டால் சொல்லி தெரிவது காமகலைகள் இல்லை என்பார்கள். ஆனால் இதே தமிழர்களின் கோயில்களில் தான் ஆயகலைகள் அறுபத்திமூன்றையும் சிலையாக செய்து வைத்திருகிறார்கள். கடவுள் இருக்கும் இடம் கருவறை என்னப்படும் அப்படி பட்ட கருவறைகளில் மாமிமாரோடு சாமியார்கள் உள்ளாசகமாக இருக்கிறார்கள். இணையங்களில் காமத்தை பாடமாக நடத்துகிறார்கள். ஆனால் தன்னை காமுகனிடமிருந்தும் பலியல்தொல்லைகளிலும் இருந்து காப்பாற்றி கொள்ள ஒரு குழந்தைக்கு அனுமதிகிரார்களில்லை. கொடுமை கொஞ்சம் மாத்தி சிந்தியுங்கள். கலாசாரம் கெட்டுவிட்டது சமுகம் அழிவுக்கு உட்படுகிறது என்ற கூச்சல் கும்மாளங்களை விட்டு அதற்க்கு வேண்டியவற்றை செய்யுங்கள். ஊடகம் என்னும் பெயரில் படுக்கையறையை   வெட்டை வெளிச்சத்தில் கொண்டுவந்து உங்கள் வாசகர்வட்டத்தை கூட்டுவதுக்கு பதில் நல்ல கருத்துகளை முன்வையுங்கள்.

தமிழன் கலாசாரம் ஒன்றும் கெட்டுவிடவில்லை. அப்படி ஒரு நிலையை ஊடகங்கள் நீங்கள் தான் உருவாக்குக்றீர்கள். நன்றாக சிந்தியுங்கள் ஒரு விடையத்தை பிரசுரிக்கும் முதலில்.

பெற்றோர்களும் சிந்தியுங்கள்... அடுத்தவன் மனைவியை பகலில் ஆடையில்லாமல் இரசிக்கதுடிப்பவர்களும் சிந்தியுங்கள்.


என்றும் அன்புடன்

ஜெனித்தா பிரதீப்

முகபுத்தகமும் தவறவி(ட்ட)டும் தருணங்களும்.



நான் ஈழத்தில் பிறந்தவன். எல்லோரும் போல எந்த கவலையும் இல்லாமல் சந்தோசமாக  எங்கள்  ஊரில் என் நண்பர்களுடன் சந்தோசமாக காலங்களை கழித்து  வந்தேன். யாருக்கு தெரியும் போர் எங்களை எல்லாம் இப்படி சிதறடிக்கும் என்று ஆளுக்கொரு இடம், நாடு சிதறியே போனோம். ஒன்றாக இருந்து பழகிய நாட்கள் மட்டுமே எப்போதெல்லாம் தனிமை வாட்டியதோ அப்போதெல்லாம் நினைத்து சந்தோஷ படும் நினைவுகளாக இருந்தது. இந்த அனுபவம் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது ஆனால் ஈழத்தில் பிறந்தவர்களுக்கு இது அதிக பட்ச கொடுமையை செய்தது யார் எங்கு இருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்று கூட தெரியாமல் இயந்திர வாழ்கையில் கால் பதித்து போலியான சந்தோசத்தை கொடுத்த பணத்தின் பின் ஓடிகொண்டிருந்தோம். 

இந்த சமயத்தில் தான் முகபுத்தக அறிமுகம் கிடைத்தது நானும் அங்கத்தவர் ஆகினேன் அதில் பெயரை தட்டச்சு செய்து பல இழந்த நண்பர்களை இணைத்துக்கொண்டேன். பலர் எனது பெயரை தேடி இணைந்து கொண்டனர் இப்படியாக இழந்த நட்பை பெற்று கொடுத்தது இந்த முகபுத்தகம் அதன் பின் இழந்த சந்தோசங்கள் மீட்க பட்டது எப்போதெல்லாம் தனிமையும், துன்பமும், தோல்விகளும் மனதை அழுத்தும் போதும், சந்தோசங்கள் ஆட்கொள்ளும் போதும் எங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொண்டோம் இழந்த எதோ ஒரு சந்தோசம் கைகெட்டிய துரத்தில் இருந்தது.
இது எனக்கு மட்டும் அல்ல, ஈழத்தில் மட்டும் அல்ல, பல பிரிந்த உண்மை உறவுகள் பலருக்கும் இந்த பிரிவு உணர்வை அனுபவிக்கும் எல்லோருக்கும் பயனுள்ளதாகவே இருந்தது. இந்த வகையில் முகபுத்தகத்துக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

ஆனால் இன்று முகபுத்தகத்தில் என்ன நடக்கிறது? எந்த செய்தி இணையத்தை திறந்தாலும் முகபுத்தகத்தால் இது நடந்தது, முகபுத்தகத்தில் இது நடந்தது. என குற்றங்கள் பதிய பட்டுள்ளது.இது யார் தவறு? முகபுத்தகத்தின் தவறா? கையில் எடுக்கும் கத்தியை உயிரை காக்கும் அறுவை சிகிச்சைக்கும் பயன் படுத்தலாம் உயிரை எடுக்கவும் பயன் படுத்தலாம் இதில் கத்தியை குற்றம் சொல்ல முடியுமா? அன்பர்களே முகபுத்தகத்தை நீங்கள் தவறாக பயன் படுத்தி விட்டு தவறை நிங்கள் செய்து விட்டு முகபுத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்றால் எந்த விதத்தில் சரியானது? இளையவர்கள் கவர்சிக்கும், பருவ உணர்வுக்கும் காதலை பகடைகாயாக்கி விட்டும் இப்பெல்லாம் காதல் பொய்யானது என்று காதல் மீது பழி போடுவது போலவே இதுவும் இருக்கிறது.

என்னை பொறுத்தவரை முகபுத்தகம் ஒரு கண்ணாடி போல எந்த நோக்கத்தில் நீங்கள் அங்கு நுழைகிறிர்களோ அதனை நிங்கள் காணலாம். அன்பை, காதலை, நட்பை, காமத்தை , நகைசுவையை,நல்ல பயனுள்ள கருத்தை எந்த நோக்கமோ அது உங்களுக்கு கிடைக்கும் இது கண்ணாடியின் குற்றமா உங்கள் குற்றமா? நான் இங்கு எல்லவிதமானவர்களையும் கண்டேன். இங்கு நாங்கள் எதை தெரிவு செய்கிறோம் எதை நாடுகிறோம் எதை தேடுகிறோம் என்பதை பொறுத்து இங்கு எங்கள் பயன் வேறுபடுகிறது இதை வைத்து எங்கள் உண்மை முகத்தை நாங்களே படிப்பதுக்கு உதவியாக இருக்கிறது. நிஜம்  சரியாக இருந்தால் விம்பம் சரியானதாக இருக்கும் இது ஒரு இலட்சிய கண்ணாடி. இப்போது புரிகிறதா எங்கள் முகத்தை நாங்களே படிக்கும் புத்தகம் தான் இந்த முகபுத்தகம் என்பது.பெயர் சரியாகத்தான் இருக்கிறது எங்கள் நிஜ முகம் சரியில்லை என தோன்றினாள் திருத்த சந்தர்பத்தை உருவாக்கி கொள்ளலாம்.


அடுத்த விடயத்தை பகிர நினைக்கும் போது கண்ணதாசனின் யதார்த்த வரிகள் நினைவுக்கு வருகிறது ..
"நாளை முதல் குடிக்க மாட்டேன்! சத்தியமடி தங்கம்!. 
இன்னிக்கு ராத்திரிக்கு தூங்க வேணும், ஊத்திக்கிறேன் கொஞ்சம்!"
ஆம் அன்பர்களே குடி என்பது போதை ஆழ்மனதை ஆட்டி  படைத்துகொண்டிருக்கும் பல குடும்பங்களை  அழித்துகொண்டிருக்கும் கொடிய வியாதி  சிலருக்கு அது உற்சாகபானம் அது அவரவர் பயன் படுத்தும் அளவை பொறுத்தது. இதை எதுக்காக இங்கு சொல்கிறேன் என்றால் முகபுத்தக பாவனை ஒரு போதையாக மாறிகொண்டிருக்கிறது இது மறுக்க முடியாத உண்மை இந்த போதையில் பலர் சிக்கித்தவிக்கிறார்கள் பல பயனுள்ள வேலைகளை சந்தர்பங்களை இன்று தவற விடுகிறார்கள் முக்கியமான வேலைகளை நாளை நாளை என்றி தள்ளி போடுகிறார்கள் நாளை முதல் குடிக்க மேடன் என்று சொன்ன எவனும் குடியை நிறுத்தியதில்லை எப்போது முகபுத்தக பாவனையால் ஒரு பயனுள்ள வேலை நாளை நாளை என்று தள்ளி போனதோ அன்றே நிங்கள் அந்த போதைக்கு அடிமை என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள். இது கால போக்கில் எங்கள் வாழ்கையையும் அழிக்கலாம். இங்கு கூட இது முகபுத்தக தவறு அல்ல எங்கள் மன கட்டுபாடற்றதன்மையே.நான் முகபுத்தகத்துக்கு வருவதுக்கு முன் பல துறை விடயங்கள்  தெரியாதவனாக இருந்தேன் என்றே சொல்லவேண்டும் இப்போது சரியோ பிழையோ என்னையும் எழுத தூண்டியது என்றால் அந்த பெருமை கண்டிப்பாக பெரும் பங்கு முகபுத்தகத்துக்கு உண்டு.  பலர் எழுதுகிறார்கள்  அவர்கள்  எழுத்தில் யதார்த்தமும், தன்னம்பிக்கையும், கருத்தாழமும் சுவை சொட்ட தருகிறார்கள். மனதில் தோன்றுவதை உண்மையாக எழுதுபவர்கள்  அவற்றுள் இருந்து தெறித்து வெளிவந்ததுதான் இந்த பாமரனின் சிறிய கருத்துக்கள். அதை பார்த்து பார்த்து தோன்றியதுதான இந்த எழுதும் ஆசை எழுத முடியும் என்ற தன்னம்பிக்கை. இப்படி பலருக்கு பயனுள்ளதாக  இருக்கிறது முக புத்தகம்.

இந்த பதிவை பகிர்வதுக்கு சில உண்மை அனுபவங்கள் தான் எனக்கு தூண்டுதலாக இருந்தது ஒரு கிழமைக்கு முன்பு ஒரு பெரியவரின் ஒரு வீட்டுக்கு கணணி திருத்தி கொடுக்க சென்றிருந்தேன் அப்போது அவரது மனைவி வந்து எனக்கு சொன்ன வசனம் "தம்பி இந்த கணணியை திருத்தி விட்டு முகபுத்தகம் பயன் படுத்த முடியாதவாறு எதாவது செய்ய முடியுமானால் செய்து விடுங்கள்" ஏன் என கேட்டதுக்கு அவருடைய கணவன் எப்ப பார்த்தாலும் முகபுத்தகத்திலேயே இருப்பதாகவும் எதாவது அவசர வேலை என்று சொன்னால் பின்பு செய்யலாம் என்பதுவும் அதையும் மீறி பலமுறை கேட்டால் கோவம் வந்து ஏசுவதாகவும் சொன்னார். மற்ற நாடில் கல்யாணம் கட்டி  கொடுத்த மகளுடன்,பிள்ளைகளுடன்  முகம் பார்த்து கதைப்பதுக்ககத்தான் கணணியை எடுத்தோம் இப்போது மகள் கதைப்பதுக்கு வந்தாலும் சில நேரங்களில் கதைக்க விடாமல் முகபுத்தகத்தில் அதையோ செய்துகொண்டு இருக்கிறார். அதுக்கு அவர் இவளுக்கு என்ன தெரியும் என்று அவர் பக்க நியாயங்களை அடுக்க தொடங்கினார், சுதாரித்துகொண்ட நான் நாட்டாமை  பதவியை புறக்கணித்து விலகி வருவது கணணி திருத்துவதை விட கடினமாக இருந்தது.

 மனோதத்துவ நிபுணர்களின் அறிக்கையில் இப்போதெல்லாம் குடி பழக்கம் போல இந்த இணைய, முகபுத்தக பழக்கத்தில் இருந்து விலகுவதுக்கு அதிக மக்கள் வருவதாக தெரிவிக்கிறார்கள் .

அறிவுத்தீ கொண்டு வாழ்கையில் ஒளி ஏற்றவும் முடியும் வாழ்கையை அழிக்கவும் முடியும், அறிவோ  தீ யோ பயன்படுத்துவதை பொறுத்தே அதன் பயனும், பாதிப்பும்..

அன்பாக இருந்தாலும் அமிர்தமாக இருந்தாலும் அளவுடன் இருந்தால் நிம்மதி,சுவை தவறினால் ஆபத்தே.



30 வருடங்களில் நீங்கள் எப்படியிருப்பீர்கள்

30 வருடங்களில் நீங்கள் எப்படியிருப்பீர்கள்
நம்ம புன்னகையரசி சினேகாவை பார்ப்போமா...........
இணையம்

தொலைபேசியை வெப்கம்மாக Blutooth மூலம் பாவிக்கலாம்

தொலைபேசியை வெப்கம்மாக Blutooth மூலம் பாவிக்கலாம்



தரவிறக்க..

உலகம் முழுவதும் இலவச தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த............

உலகம் முழுவதும் இலவசமாக உரையாடலாம்...................................

இங்கே சொடுக்கவும்.....

உலகம் முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிவி சேனல் நிகழ்ச்சிகளை பார்க்க முடியும்.

யூடியூப் தெரியும்.டிவி டியூப் தெரியுமா?
டிவியூடியூப்பை டிவி நிகழ்ச்சிகளுக்கான யூடியூப் என்று சொல்லலாம்.
இந்த இணையதளம் வாயிலாக டிவி நிகழ்ழ்ச்சிகளை இலவசமாக பார்க்கலாம். சும்மா இல்லை;உலகம் முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிவி சேனல் நிகழ்ச்சிகளை பார்க்க முடியும்.
டிவி நிகழ்சிகளை இணையத்தில் திரட்டித்தரும் சேவையான டிவி டியூப் அகண்ட அலைவரிசை மற்றும் இண்டெர்நெட் டிவி நிகழ்ச்சிகளில் இருந்து சிறந்தவற்றை திரட்டித்தருவதாக சொல்கிறது.
இத‌ற்காக‌ ட‌வுண்லோடு செய்ய‌வோ அல்ல‌து எதாவ‌து சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்ய‌வோ தேவையில்லை நிக‌ழ்ச்சிகளை தேர்வு செய்து கிளிக் செய்தாலே போதும்.
டிவி நிக‌ழ‌ச்சிக‌ள் ப‌ல‌வேறு த‌லைப்புக‌ளில் வ‌கைப்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. அவ‌ற்றில் விருப்ப‌மான‌வ‌ற்றை தேர்வு செய்து கொள்ள‌லாம்.
இதைத்த‌விர‌ முக‌ப்பு ப‌க்க‌த்திலேயே பிர‌ப‌ல‌மான‌ சேனல், ச‌மீப‌த்திய‌ சேன‌ல் , த‌ற்போது பார்க்க‌ப்ப‌டும் சேன‌ல் ஆகிய‌ ப‌குதிக‌ள் மூல‌மும் நிக‌ழ்ச்சிக‌ளை தேர்வு செய்ய‌லாம்.
உல‌க‌லாவிய‌ அனுப‌வ‌த்தை விரும்புகிற‌வ‌ர்க‌ளுக்க‌ ச‌ரியான‌ விருந்து இந்த‌ த‌ள‌ம்.அதோடு க‌ண்ணை க‌சிக்கி கொண்டு பார்க்கும் ந‌ம்மூர் சேன‌ல்க‌ளை பார்த்து வெறுத்துப்போன‌வ‌ர்க‌ள் இந்த‌ டிவி டியூப்பை மிக‌வும் விரும்ப‌லாம்.
 ————-
 http://www.tv-tube.net/