தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!
Showing posts with label வறுமை. Show all posts
Showing posts with label வறுமை. Show all posts

வெற்றியின் ரகசியம்


ஆசைகள் மிக சுலபமாக எங்கள் மனதை ஆட்கொள்கிறது அதனை அடைய முடியுமா இல்லையா என எதையும் ஆராயாமல் அது பாட்டுக்கு கனவு காண்கிறது எல்லாம் நிறைவேறிவிட்டதாக .... ஆசை இல்லை என்றாலும் வாழ்க்கை எதிர்பார்ப்பு இருக்காது உப்பில்லாத உணவு போலாகிவிடும். அளவுக்கு அதிகமானாலும் அதுவே வாழ்கையையும் அழித்துவிடும். எனவே இந்த ஆசையை எப்படி வகைபடுத்துவது எதை நோக்கி எங்கள் பயணத்தை ஆரம்பிக்கவேண்டும் என்று முடிவெடுப்பது மிக முக்கியம். சிந்திக்க தெரியாத ஆழ்மனம் ஆயிரம் சொல்லும் பின்விளைவுகளை சிந்திக்காது. எந்த ஒரு ஆசை யாரையும் பாதிக்காமல் தொந்தரவு செய்யாமல் எங்களுக்காக நிறைவேற்ற முடியுமோ அதை நிறைவேற்றுவதில் எந்த தவறும் இல்லை. அதுவே எங்கள் ஆசை நிறைவேறுவதில் இன்னொருவர் சுகந்திரம் பறிபோகிறது என்றால் அதை நிறுத்திவிடவேண்டும். தவறான ஆசை. அடுத்த படியாக எங்கள் ஆசையில் எங்களுக்கும் பயனிருந்து இன்னும் பலருக்கும் பயனாக இருந்தால் அந்த மாதிரியான ஆசைகள் எங்கள் இலட்சியங்களாகவே நாங்கள் கருதலாம்.

 சில ஆசைகள் மற்றவர்களை,சமுதாயத்தையே அழித்து எங்களை சந்தோஷ படுத்துவதாக இருக்கும் அவற்றை நிறைவேற்ற துடிப்பவர்கள் தேச துரோகிகள். சட்ட விரோதிகள். சட்டத்துக்கு விரோதமாக ஆசைகளை நிறைவேற்றியவர்கள் வாழ்கையில் எப்போதும் அவர்கள் நிம்மதியை எதிர்பார்க்க முடியாது. எதேட்சையாக காவல்துறை அவர்களின் வீட்டருகில் வந்தாலே தன்னை தேடித்தான் வருகிறதோ என்ற பயம் அவர்கள் நிம்மதியை அழித்துவிடும்.இப்படியே தொடரும் வாழ்க்கை. எப்போதும் எங்கள் பெரிய ஆசைகள் அதாவது எங்கள் இலட்சியங்கள் போதுநலமனதாக இருந்தால் மிக சிறப்பு. நான் பெரிய பணக்காரனாகவேண்டும் என்ற ஆசை இருந்தால் கூடவே அதன் பின் பலருக்கு என்னால் வேலை வாய்ப்பை கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கவேண்டும். இல்லை என்றால் சுயநலமான  இலட்சியமாகிவிடும்.  ஆசைகளை நிறைவேற்றுவதில் வெற்றியடைவதுக்கு சில தகுதிகள் இருக்கவேண்டும்.

 முதலாவது அது தொடர்பான அறிவு. ஒரு வெற்றியை தீர்மானிப்பதில் அது தொடர்பான அறிவுதான் முதல்நிலை வகிக்கிறது.பல பாமரர்கள் இருக்கிறார்கள் அவர்களால் நன்றாக உழைக்க மட்டுமே முடியும் அதை எங்கே எப்படி பயன் படுத்துவது என்று தெரிவதில்லை அதனாலேயே வாழ்நாள் முழுவதிலும் மற்றவர்களுக்காக உழைத்து கடைசிவரை உழைப்பாளியாகவே வாழ்ந்து காலத்தை கடந்து விடுகிறார்கள் அந்த உழைப்பை எப்படி எங்கே பயன்படுத்தவேண்டும் என்ற அறிவுள்ளவர்கள் இவர்களை பயன்படுத்தி அவர்கள் சமுதாயத்தில் வெற்றிகளை குவிக்கிறார்கள். 

அறிவு மட்டும் இருந்தால் வெற்றியடைந்துவிடமுடியுமா? இந்த உலகத்தில் பல அறிவாளிகள் இருக்கிறார்கள் அவர்கள் எல்லோரும் வெற்றியாளர்களா? இல்லை அவர்களில் பலருக்கு விடாமுயற்சி, உழைப்பும் ,பொறுமை,நம்பிக்கை இருப்பதில்லை  "புத்தியுள்ள மனிதன் எல்லாம் வெற்றி காண்பதில்லை" என்ற சந்திரபாபுவின் பாடல்கள் நினைவுக்கு வருகிறது இப்போதெல்லாம் பலர் ஏதோ அலுவலகம் சென்றோம் முடித்து வந்தோம் என்ற சாதாரண வாழ்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் இவர்கள் யாருக்கும் தொந்தரவில்லாதவர்கள் ஆனாலும் இவர்கள் முயற்சி என்பது புதிதாக ஒன்றும் இருந்துவிடபோவதில்லை இவர்கள் வாழ்வில் பாரிய வெற்றிகள் இருக்காது ஆனாலும் இவர்கள் அறிவாளிகள்தான் . இருக்கும் வாழ்க்கை போதும் என்று அதையே வாழ பழகிக்கொண்டவர்கள், இதில் குறை எதுவும் இல்லை. அறிவு மட்டும் வெற்றியை தந்துவிடாது. 

இந்த முயற்சி எப்படி உருவாகிறது?
என்னிடம் முயற்சி இருக்கிறது என்பதற்காக கடல் தண்ணீரை என்னால் குடித்தே முடித்துவிட முடியுமென்று விடாமுயற்சி கொண்டு தண்ணீரை குடிக்க ஆரம்பித்தால் சாத்தியமா? இல்லை எங்கள் முயற்சியை எங்கே பிரயோகித்தால் வெற்றி கிடைக்கும் என்பதை வழிகாட்டும் அந்த அறிவு  மிக முக்கியம்,இந்த அறிவு உறுதியாக இருந்தால் நம்பிக்கை உண்டாகும்.இந்த நம்பிக்கை கடைசிவரை இருக்கவேண்டும்  நம்பிக்கை எங்களை விடாமல் முயற்சி செய்ய வைக்கும்.

 பலர் வெற்றியை நோக்கி 90 %  சென்றிருப்பார்கள் அங்கெ அவர்கள் நம்பிக்கையை இழந்துவிடுவார்கள் மேலும் பத்து சதவிகிதம் முயற்சி செய்திருந்தால் வெற்றியை அடைந்திருக்கலாம் எனவே பொறுமை என்பதுவும் இங்கே முக்கியமாகிறது.
எனவே வெற்றிக்கு அறிவு,நம்பிக்கை,பொறுமை,முயற்சி,உழைப்பு எல்லாமே முக்கியமாகிறது.. 

இந்த கட்டுரை சம்பந்தமான எங்கோ வாசித்த ஒரு கருத்து நினைவுக்கு வருகிறது.... 

நூறு முறை முயற்சித்து ஒரு தடவை வெற்றியடைந்தேன் 99 தடவை தோல்வியில் இருந்து நூறு முறை வெற்றியடைவது எப்படி என்பதை அறிந்துகொண்டேன்.ஆயிரம் தடவை முயற்சி செய்யவேண்டும் என்பதுவே அது.
 வெற்றி என்பது ஆசை பட்டதும் வந்துவிடுவதில்லை எதுவும் செய்யாமல்  வரவில்லை என்றதும் குறைகளை வேறு இடங்களில் திணிப்பதால் எதுவும் நடக்க போவதில்லை.......

மீண்டும் தலைவர் பிரபாகரன் (நன்றி மறந்த தமிழர்கள்....!!!)



நேற்று இரவு ஏனோ மனது சிறிது பாரமாக இருப்பதை உணர்ந்தேன் அதை திசை திருப்ப வழமை போல வலைபூக்களை துலாவிகொண்டிருந்தேன் அப்போது நண்பர் சஞ்சயன் தனது பயண அனுபவங்களை பகிர்ந்திருந்தார் அவற்றை பார்க்க நேர்ந்தது எனது மன கவலை வறண்ட நிலத்தில் விழுந்த மழைத்துளிபோல மறைந்து போனது காரணம் அவர் எழுத்துக்களில் என் மனதில் சுனாமியே அடித்திருந்தது.

விடுமுறைக்கு ஊருக்கு வருபவர்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன் அவர்கள் எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் வேறுவிதமாக இருக்கும் இப்படியானவர்கள் மத்தியில் இவரின் தேடல் எங்கள் மக்களுக்கு நல்லதொரு பாடம். எங்களுக்காக போராடியவர்கள் இப்போது இருக்கும் நிலைமை என்ன,நாங்கள் எதை பற்றி கவலை பட்டுக்கொண்டு இருக்கிறோம் என்பதையும் எங்கள்  குறுகியமனப்பாங்கையும் எங்கள் சுயநல மனதுக்கு புரிய வைத்திருக்கிறது இவரின் இந்த அனுபவ பகிர்வு. இவரின் இந்த தேடல் இவருக்கு தெரிந்த ஒரு சிலருக்கு தெரிந்தவர்களிடம் இருந்து அறிந்துகொண்டது அதிலும் சிலவற்றைத்தான் அவர் பகிர்ந்திருப்பார் அப்படியானால் இதுபோன்ற இன்னும் எத்தனை பேர் இழப்புகளை தாங்கிக்கொண்டு வாழ்கையை இறுதிவரை போராட்டமாக சுமக்க போகிறார்கள் ஈழ போராட்டத்துக்காக பங்களிப்பு செய்ததுக்கு???? 

ஈழ போராட்டம்  கசப்பான அனுபவத்தில் முடிந்ததில் இருந்து எங்கள் எதிர் பார்ப்புகள் என்னவாக இருந்தது. இனி ஈழம் கிடைக்காதா என்ற கவலை மனம் முழுவதும் பரவி ஒருவித மன நோயாளர்கள் போல எங்களை மாற்றியது உண்மை அதன் விளைவால் தலைவர் மீண்டும் வருவார் மீண்டும் ஈழ போராட்டம் தொடரும் என்ற நம்பிக்கையை நாமே உருவாக்கி அந்த கனவில் எங்கள் மனநோய்க்கு மருந்தாக்கி கொண்டோம். அது மட்டுமல்ல இந்த பின்னடைவை தாங்கி கொள்ள முடியாமல் எங்கும் தமிழ் பற்றை புகுத்த முனைந்தோம் தமிழ் நடிகர்கள் இலங்கைக்கு சென்றால் அவரின் படங்கள் தடை செய்வோம், ஒரு தமிழன் ஆங்கிலத்தில் தமிழ் படங்களில் பாடல் எழுதினால் கொதித்தெழுவது இதுபோன்ற நியாயமற்ற காரணங்களை தூக்கி பிடித்து எங்கள் மன வேதனையை திசை திருப்ப முயன்றோம் . மக்களின் மனதினை நன்கு புரிந்துகொண்ட அரசியல் வாதிகள் சினிமாக்காரர்கள் என எல்லோரும் எங்கெங்கு ஈழம் பற்று பற்றி பேச முடியுமோ அங்கெல்லாம் பேசி அவர்களை உயர்த்திகொண்டார்கள்.ஆனால் எதை நாங்கள் நினைத்திருக்க வேண்டுமோ அதை மறந்துவிட்டோம்.

எங்களுக்காக நாங்கள் சொகுசாக இங்கு வாழ களத்தில் போராடி இன்று ....

நண்பர் சஞ்சயனின் அனுபவ பகிர்வில் இருந்து ...
http://visaran.blogspot.com/2012/08/blog-post_19.html 
"ஆனால் விதிவசமாய் நான் சந்தித்த, புனர்வாழ்வு பெற்ற ஒரு சில முன்னாள் போராளிகளிகள் மற்றும் மனிதர்களின் சோகம் என்னை கடந்த சில நாட்களாக ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. 
  • விபச்சாரம் செய்யும்  முன்னாள் பெண்போராளிகள்,
  • ஏழ்மையினால் குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவு வழங்கமுடியாது முகாம்களில் தவிக்கும்  முதுகெலும்பு பாதிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளி, 
  • தொடைக்கு மேற் பகுதியுடனேயே காலை இழந்து மனைவிகுழந்தைகளை  காப்பாற்றுவதற்காக வீதியோரத்தில் சுண்டல் விற்கும் முன்னாள் போராளி,
  • திருமணமாகி  பத்தே மாதத்தில் கடல் மோதலொன்றில் காணாதுபோன கேர்ணல் தரத்திலான தனது கணவன்  இன்னும் உயிருடன் இருப்பார் என்னும் நம்பிக்கையுடன் தனது 4 வயதுப் பெண்குழந்தையுடன், வாழ்வாதாரம் இன்றி  தம்பி தங்கையுடன் முகாமில் தவிக்கும் முன்னாள் பெண் போராளி்,
  • இரு கைகளையும் தோள்மூட்டு்ன் இழந்த தனது முன்னாள்  போராளியான மகனை பராமரிக்கும் வயதான தந்தை, 
  • இருகண்களையும் இழந்த முன்னாள்  ‌போராளி,
  • குழந்தைப்போராளியாய் இயக்கத்தில் இணைக்கப்பட்டு இறுதிப் ‌ ‌போரில் பெற்றோர் சகோதரர்களை இழந்த முன்னாள் போராளி"
இவர்கள் வாழ்க்கை போராட்டமாக மாறிவிட்டது இப்போதும் நாங்கள் ஈழத்தில் போராட்டம் மீண்டும் வெடிக்காதா என்று எங்கள் சுயநலத்தை விதைக்கிறோமே தவிர இவர்களை பற்றி அறிய கூட முயலவில்லை என்பதுதான் உண்மை. எத்தனை பேர் இது பற்றி பேச தயாராக இருக்கிறீர்கள் ... 

எனக்கு ஒன்றுதான் புரியவில்லை முகபுத்தகதை திறந்தால் ஈழம் பற்றி தினமும் பல ஆயிரம் பகிர்வுகள் எங்கும் ஈழம் சம்பந்தமான குழுக்கள், தமிழகத்தில் எந்த அரசியல்வாதியை பார்த்தாலும் ஈழத்துக்காகவே பிறந்தவர்கள் போல பேட்டிகள் மேடை பேச்சுக்கள் அப்படி இருக்க ஒரு இடத்திலும் இதுபோன்ற உண்மை பதிவுகளை, பேச்சுக்களை இவற்றை நிவர்த்தி செய்ய எதாவது திட்டமிடல் முயற்சி  நான் பார்த்ததில்லை சுய விளம்பரத்துக்கான விடயமாக போய்விட்டது ஈழம்..

புலம்பெயர்ந்த தேசத்தில் ஈழ தமிழர்கள் எத்தனை இலட்சம் இருக்கிறார்கள் அவர்களில் எத்தனைபேர் பணங்களில் புரள்கிறார்கள் அவர்களுக்கு குடியுரிமை வாங்கித்தந்த போராட்டத்தில் பங்கேற்று இன்று ஒரு வேளை உணவுக்காக அங்கங்களை இழந்து ,விபச்சாரம் செய்து வாழ்வை போராட்டமாக மாற்றிகொண்டிருக்கும் இந்த முன்னாள் போராளிகளில் ஒவ்வொருத்தருக்கு ஒரு புலம் பெயர்ந்த குடும்பம் உதவி செய்தாலே தாரளமாக போதுமானது... இது எங்களின் கடமையும் கூட ... ஆனால் நாங்கள் அன்று புலிகள் பெற்ற வெற்றி பெருமைகளையும், ஈழ வரலாறுகளையும், மீண்டும் தலைவர் வருவார் , போராட்டம் மீண்டும் மலரவேண்டும் போன்ற விடயங்களை பற்றி பேசுவதால், சிங்களவர்களையும், அவர்களோடு நட்புறவை பேணுபவர்களையும் வன் சொற்களால் எசுவதாலும் எங்களை ஈழ ஆதரவாளர்கள் என நாங்களே நினைத்து பெருமையடைந்துகொண்டிருக்கிறோம்.


எங்களுக்காக இரத்தம் சிந்தி, உயிரை விதையாக்கி வாழ்ந்தவர்கள், அவர்கள் குடும்பங்கள் பற்றி சிறிது சிந்தியுங்கள் நாங்கள் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு காரணம் யார்? எங்களுக்காக போராடி இன்று ஒரு வேளை உணவுக்காக விபச்சாரம் செய்யும் அளவுக்கு முன்னாள் போராளிகள் செல்லுமளவுக்கு நாங்கள் எங்கள் சுயநலம் இருக்கிறது என்றால் நாங்களனைவரும் உயிருள்ள சுயலப்பிணங்கள்..


நண்பர் சஞ்சயனின் பயண அனுபவங்கள் இனித்தான் விரிவாக பதிவாகும்... இன்னும் பல 
உண்மைகளுடன் .....!!!
இணைந்திருங்கள் அறிய விரும்புபவர்கள்.
http://visaran.blogspot.com/ 

பணமும் பசியும் இழந்த நிம்மதி...!!!


பணம் தனது 

ஆடம்பரத்தால்-மேலும்
மேலும் சிலரை மட்டும் 
அலங்கரிக்க ...

பசி  அதனது 
கொடூரத்தால் -உயிர் 
போகும்வரை 
ஏழைகளை மட்டும் 
உருக்கிகொண்டிருக்கின்றது ..!!!

பணமும் பசியும் 
எங்கெங்கே அதிகமோ 
அங்கெல்லாம் சந்தோசம் 
நிம்மதி இழந்து விலகிவிடுகிறது ...!!!