நம்பிக்கை இருந்தால் சிறகுகள் தேவை இல்லை பறப்பதுக்கு!!!
நீ சாதிக்க நினைத்தால் யாரும் இல்லை தடுப்பதுக்கு!!!
.......................................................................................................................
பிரச்சனைகள் வந்த போது
எதிர் கொள்ள துணிவின்றி
ஓடி ஒளிந்துகொண்டால்
உன்னோடு ஒளிந்து கொள்ளும்
வெற்றிகளும்
உன் வாழ்கையும்.........
வெற்றி
அனுபவங்களில் இருந்து கிடைக்கிறது ...
அனுபவம்
தோல்விகளில் இருந்து கிடைகின்றன ...
தோல்வியை எதிர் கொள்ளும் பக்குவமே
முதல் வெற்றி...
(தோல்வி)முதல் வெற்றி இன்றி
தொடர் வெற்றி இல்லை ...
தோல்விகளே இல்லை என்றால்
திறமை
முயற்சி
உழைப்பு
தன்நம்பிக்கை
தனித்துவமற்று போகும் ...
உன் வாழ்க்கை
உனக்கு மட்டும்தான் வாழ்க்கை
மற்றவர்களுக்கு வேடிக்கை
துணிந்து நில்
எதுவானாலும் பார்த்துவிடலாம்
வந்தால் வாழ்க்கை
இல்லை அனுபவம்......
அருமையான தன்னம்பிக்கை வரிகள்!
ReplyDelete@koodal bala
ReplyDeleteவருகைக்கு நன்றி .................