வணக்கம் நண்பர்களே! எனது வலைபூவுக்கு உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த பாமரனும் எழுத ஆசை கொண்டு எழுத முயற்சி செய்து வருகிறேன் அதற்கு உங்கள் விமர்சனங்களை எதிர்பார்கிறேன். நன்றி.

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

இணையத்தில் பணம் சம்பாதிக்க விரும்பினால் இங்கே

Get cash from your website. Sign up as affiliate.

முகபுத்தகத்தில் எனது பதிவுகள்..

என்னை போல் இங்கு எத்தனை பொதுநலவாதிகள்!!!


என்னை தவிர 
எல்லோரும்
ஏன் இப்படி இருக்கிறார்கள்!!!

அவனை  பார்த்தேன்
ஆயிரம்  அழுக்கு
இவனை பார்த்தேன் 
எத்தனை இழுக்கு!!!

நித்தமும் இவர்களுக்கு
இலவச ஆலோசனை 
அள்ளி அள்ளி கொடுத்தேன் 
பயனின்றி தலை கவிழ்ந்தேன்
என்ன மனிதர்கள் இவர்களென்று!!!

என்ன செய்வதென தெரியாமல்
எனக்குள் எட்டி பார்த்தேன் 
ஏங்கித்தான் போனேன் 
வெட்கி  சுயநலம் கொண்டேன் 
இனி எனக்கு மட்டுமே 
இலவச ஆலோசனை!!!

மூகத்தின் மீது எனக்கு எத்தனை அக்கறை
ஏனோ என்மீது இல்லாமல்  போனது
என்னை போல் பலர் இங்கு பொதுநலவாதிகள்!!!

6 comments:

  1. இப்படி என்றால் நானும் பொதுநலவாதிதான்.

    ReplyDelete
  2. என்ன செய்வதென தெரியாமல்
    எனக்குள் எட்டி பார்த்தேன்
    ஏங்கித்தான் போனேன்
    வெட்கி சுயநலம் கொண்டேன்
    இனி எனக்கு மட்டுமே
    இலவச ஆலோசனை!!!//

    நான் அடிக்கடி இப்படித்தன் சுய பரிசோதனை
    செய்து கொள்வேன்
    அதைத்தான் பதிவாகவும் தருகிறேன்
    அருமையான சிந்தனை
    மனம் கவர்ந்த பதிவு

    ReplyDelete
  3. நன்றி நண்பரே............

    ReplyDelete
  4. இதைத்தானே சொல்லி வைத்திருக்கிறார்கள் பெரியவர்கள்.”நீ உன்னைத் திருத்து.உலகம் தானாகவே திருந்தும்”என்று.அருமையான சிந்தனை !

    ReplyDelete